செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

சனி, ஏப்ரல் 21, 2012

நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் அரசியல் வாழ்க்கை.!


சுதந்திரமான சிந்தனை கொண்டவர்கள் எந்த அரசியல் கட்சியிலும் அங்கம் வகிக்க முடியாது. ராதாவின் நிலைமையும் அதுதான். பெரியாரைத் தலைவர் என்றவர் ராதா. ஆனால், அவரையே விமர்சித்து... அவருக்கு முன்னாலேயே பேசுவார். திராவிடர் கழகத்தில் இருப்பவர் போலக் காட்டிக் கொண்டார்... அவ்வளவுதான். ‘காமராஜர் தான் தமிழர் தலைவர்’ என்று சொன்னார். அதற்காக, காங்கிரஸ் கட்சியை ராதா ஏற்றுக்கொள்ளவில்லை. கருணாநிதி உள்ளிட்ட தி.மு.க.வினர் சிலரைப் பிடிக்கும். ஆனால், அந்தக் கட்சியைக் கடுமையாக விமர்சித்தார்.


எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்தார். ஆனால், அவருக்கு அரசியல் தேவை இல்லை என்றார். எமர்ஜென்சிக்கு எதிராகப் பலரும் சென்னை சிறையில் அடைக்கப் பட்டபோது ராதாவும் உள்ளே இருந்தார். எமர்ஜென்சிக் கொடுமைகளுக்கு எதிராக அவர் வாயைத் திறக்கவில்லை. ‘நான் ஒரு நடிகன். எனக்கு அரசியல் எண்ணங்கள் உண்டு.


ஆனால் கட்சி ஈடுபாடு தேவை இல்லை’ என்பதில் கடைசி வரை உறுதியாக இருந்தார். தன்னுடைய சிந்தனையின் போக்குக்கு ஏற்ப தனது அரசியலை வடிவமைத்துக் கொண்டார். அதில், சுயநலம் எந்தக் காலத்திலும் இல்லை. எவருடைய தயவுக்காகவும் எம்.ஆர்.ராதா தனது சிந்தனையை அவர் அடமானம் வைத்ததும் இல்லை.!

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக