செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

புதன், மே 09, 2012

“எங்கும் லஞ்சம், எதிலும் லஞ்சம்.!”



லஞ்சம் வாங்குபவர்கள் குறைவான எண்ணிக்கையிலும், லஞ்சம் தருபவர்கள் அதிகமான எண்ணிக்கையிலும் இருப்பதால்தான், லஞ்சம் வளர்ந்து கொண்டே போகிறது என்கிறார் ‘லஞ்சம் வாங்காதீர்கள், கொடுங்கள்’ என்ற நூலின் ஆசிரயர் ஆர்.நடராஜன். இதற்கு ஓர் உதாரணம்:


இந்தியாவின் இடைக்கால பிரதமராக இரண்டு முறை இருந்தவர் குல்சாரிலால் நந்தா. லஞ்சம் இல்லாத நிர்வாகத்தை ஏற்படுத்த ‘சதாச்சார் சமிதி’ என்ற அமைப்பைத் தொடங்கினார். ‘லஞ்சம் வாங்கக்கூடாது, லஞ்சம் தரக்கூடாது’ - இவை இரண்டும்தான் இந்த சமிதியின் கொள்கைகள். ‘என்னுடைய அமைப்பில் நீங்களும் சேர வேண்டும்’ என்று ஸ்ரீபிரகாசாவைக் கேட்டுக்கொண்டார் நந்தா. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தமிழக கவர்னராக இருந்தவர் இவர்.


‘நீங்கள் இரண்டு நிபந்தனைகள் விதிக்கிறீர்கள். ஒரு நிபந்தனையைத்தான் என்னால் ஏற்க முடியும்’ என்றார் ஸ்ரீபிரகாசா. விளக்கம் கேட்டார் நந்தா. ‘லஞ்சம் வாங்கக்கூடாது என்ற நிபந்தனை சரியானது. நான் வாங்க மாட்டேன். ஆனால் கொடுக்காதே என்று சொல்லாதீர்கள். லஞ்சம் கொடுக்காமல் என்னால் இருக்க முடியாது. எனக்கு காரியம் ஆக வேண்டாமா?’ என்றார் ஸ்ரீபிரகாசா. இது ஒரு கவர்னரின் மனநிலை மட்டுமல்ல. அப்பாவி மக்கள் முதல் அனைவரும் இப்படித்தான் நினைக்கிறார்கள். என்ன செய்ய?

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக