மன்மோகன்சிங்கை ‘சிகண்டி’ என்று பிரபல உச்சநீதிமன்ற வழக்குரைஞரும், சமூக ஆர்வலர் ஹசாரே குழு உறுப்பினருமான பிரசாந்த் பூஷன் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. சரி சிகண்டி யார்? ஏன் இந்த விமர்சனம்?
மகாபாரதத்தில் வரும் பாத்திரம்தான் சிகண்டி. ஆண் உருவம் தாங்கிய பெண். பீஷ்மரை வீழ்த்த நினைத்த அர்ச்சுணன், சிகண்டியை முன்னிறுத்தி ஏமாற்றிக் கொல்வார் என்கிறது அந்தக் காப்பியம். ஆண் உருவம் தாங்கிய பெண் என்பதையும்,ஏமாற்றம் காட்டுவதற்காக உருவாக்கப்பட்ட கேரக்டர் என்பதையும் காங்கிரஸ்காரர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? இல்லை, ஏற்றுக் கொள்ளத்தான் முடியுமா?
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக