குடியரசுத்தலைவராக பொறுப்பேற்றுள்ள பிரணாப் முகர்ஜிக்கு ராசியான எண் 13 என்று கூறப்படுகிறது. அந்த எண் ராசியற்றது எனப் பொதுவாக பலர் கருதும் நிலையில், பிரணாப்பின் வாழ்க்கையின் முக்கிய தருணங்களில் எல்லாம் இந்த எண்ணுடன் அவருக்கு தொடர்பு இருந்துள்ளது. அவர் முதன்முதலாக மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டது 2001 ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதி. (அதற்கு முன் பல ஆண்டுகளாக அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்)
அவரது திருமணம் நடைபெற்றது 1957 ஆம் ஆண்டு ஜூலை 13. அவர் குடிரயரசுத்தலைவாரக ஆவதற்கு முன் வசித்து வந்த தால்கடோரா சாலையில் உள்ள கதவு எண் 13 கொண்ட வீட்டில்தான். மக்களவைத் தலைவராக இருந்த போது, நாடாளுமன்ற வளாகத்தில் அவருக்கு ஒதுக்கப் பட்ட அலுவலக அறை எண் 13. அவர் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும், நாட்டின் 13 ஆவது குடியரசுத் தலைவராகத்தான்.
கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக