செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

சனி, ஆகஸ்ட் 11, 2012

காங்கிரஸ் அல்லாத முதல் ஆட்சி.!



கேரளாவில் 1957 ஆம் ஆண்டு அமைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிதான், முதல் எதிர்க்கட்சி அமைச்சரவை என்று சுதந்திர இந்தியாவில் கூறப்படுகிறது. இங்கு, இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு முதலமைச்சராக இருந்தார். பிற்காலத்தில் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த வி.ஆர்.கிருஷ்ணய்யர், இந்த அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவரே. இந்த ஆட்சி இரண்டரை ஆண்டுகளே நீடித்தது. ஆட்சிக்கு எதிராக உள்நாட்டுக் குழப்பம் எழுந்தது.

இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு 
இதற்குப் பின்னணியில் காங்கிரஸ் கட்சியே இருந்ததாகச் சொல்வார்கள். இதனால், கம்யூனிஸ்ட் ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி வந்தது. மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஓர் ஆட்சியை 356 ஆவது சட்டப் பிரிவைப் பயன்படுத்திக் கலைக்கும் காரியம் முதன்முதலாக அரங்கேறியதும் அப்போதுதான். இதைத்தான், ‘வில்லன் வெற்றி பெற்றுவிட்டான்’ என்று வி.ஆர்.கிருஷ்ணய்யர் எழுதினார். அதற்குப் பிறகும், வில்லன் வெற்றி எத்தனையோ முறை வெற்றி பெற்று இருக்கிறான்.!

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக