செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

ஞாயிறு, ஆகஸ்ட் 12, 2012

பிரணாப்புக்கு வெளிநாட்டு சொகுசு கார்.!



ஜனாதிபதி பயணம் செய்ய புதிய வெளிநாட்டு காரான மெர்சிடெஸ் பென்ஸ் S-600 (W221) என்ற ரக கார்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது ஜெர்மனியின் ஸ்டட்ஹார்ட் என்ற இடத்தில் புல்மண்ட்கார்டு தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை மிகவும் சிறப்பான உட்புறங்களை கொண்டதாக தயாரிக்கப் பட்டுள்ளது. இதில் டிரைவர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருடைய இருக்கைகள் 2 தனி அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.


இதில் தானியங்கி கவுகள், குண்டு துளைக்காத கண்ணாடிகள், திரைப்படம், இசை ஆகிய நவீன வசதிகளை கொண்டுள்ளன. எந்த நேரமும் செய்திகளை பார்க்கும் வகையில் தொலைக்காட்சி உள்ளிட்டவையும் இதில் உள்ளன. உள்ளே இருந்து ஜனாதிபதியால் வெளியே உள்ள மக்களை பார்க்க முடியும். ஆனால், வெளியில் இருப்பவர்கள் உள்ளே இருப்பவரை பார்க்க முடியாத வகையில் மெர்சிடெஸ் பென்ஸ் S-600 வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் தட்பவெட்ப நிலைக்கேற்ற வகையில் உட்புறத்தை சூடாகவும், குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்வதற்கான அமைப்புகளும் இதில் உள்ளன.

மிக நீண்ட பயணங்களை செய்வதற்கு வசதியாக சொகுசு ஷோபாக்கள் படுக்கைகளாக பயன்படுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்லும் வழியை கண்டறிந்து தெரிவிக்கும் ஜி.பி.எஸ். கருவிகள் மற்றும் அனைத்து வகையான செல்போன் சேவைகள் ஆகியவையும் செய்யப் பட்டுள்ளது. மேலும் தானாகவே இயங்கக்கூடிய தொலைபேசி வசதியும், அவசர தொலைபேசி அழைப்புகளும் உட்புறம் அமைக்கப்பட்டுள்ளன.


மேலும், எதிரும் புதிருமாக 2 வரிசை இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், ஏ.கே.47, எம்.67, கையெறி மற்றும் வெடிகுண்டுகள், உள்ளிட்டவற்றால் பாதிக்காத வகையில் சோதனை நடத்தப்பட்டு தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் டேங்க் 90 லிட்டர் எரிபொருள் நிரப்பும் வசதியுடையது. இதன் சக்கரங்களும் குண்டு துளைக்காத ரப்பரால் தயாரிக்கப்பட்டுளது. 

ஏதேனும் சிறிய கோளாறோ, அசம்பாவிதமோ ஏற்பட்டால் கூட உடனே அலாரம் அடிக்கும் வகையில் மெர்சிடெஸ் பென்ஸ் S-600 அமைக்கப் பட்டுள்ளது. மேலும் சுற்றுப்புறத்தையும், காரின் உட்பகுதியையும் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப் பட்டுள்ளன. இத்தனை வசதிகளை கொண்ட ஜனாதிபதியின் கார் ரூ.12 கோடியாகும்.


முந்தைய குண்டு துளைக்காத 10 லட்சம் மதிப்புள்ள அம்பாசிட்டர் காரில் இருந்து, தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு இந்த புதிய ரக கார் உருவாக்கப்பட்டுள்ளது. இது கடந்த குடியரசுத்தலைவர் பிரதிபா பாட்டீலுக்கும் வழங்கப்பட்டது. அதற்கு முன்னர், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அம்பாசிட்டர் கார்களே பயன்படுத்தப்பட்டன. இவ்வகை கார்கள் மேற்குவங்காளத்தில் உள்ள உத்தர்பாரா என்ற இடத்தில் தயாரிக்கப்பட்டன.

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

1 கருத்து:

  1. தகவலுக்கு நன்றி... ஸ் ஸ் ஸு (பெருமூச்சு தான்)

    தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு