செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

வெள்ளி, ஆகஸ்ட் 17, 2012

“தனித்தன்மை” என்றும் குறைவதில்லை.!



200 பேர் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளர் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி, “யாருக்கு இது பிடிக்கும்” எனக் கேட்டார். கூடியிருந்த அனைவரும் தனக்கு பிடிக்கும் என கைகளைத் தூக்கினர். பேச்சாளர், “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன். ஆனால் அதற்கு முன்...” என சொல்லி, அந்த 500 ரூபாய் நோட்டை கசக்கி சுருட்டினார்.


பிறகு அதை சரிசெய்து, “இப்போதும் இதன் மீது உங்களுக்கு மதிப்பு இருக்கிறதா?” என்றார். அனைவரும் கைகளைத் தூக்கினர். அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டைக் காட்டி, “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா” என்றார். அனைவரும் கைகளைத் தூக்கினர்.

அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்த்தாள் பல முறை கசங்கியும் மிதிபட்டும் அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப்படும் போதும் தோல்விகளைச் சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம்.”


நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும்  ஒவ்வொரு தனித்தன்மை இருக்கும். அதன்மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்க்கை என்ற பயிர்க்கு தைரியமும் தன்னம்பிக்கையும்தான் உரமும் பூச்சிக்கொல்லியும். ஆகையால் தன்னம் பிக்கையை இழக்காமல் வாழுங்கள்” என்றார். 


(நான் கல்லூரியில் படித்த போது N.S.S. வகுப்பில் 10 நாட்கள் மயிலாடுதுறை அடுத்த கோழிக்குத்தி என்ற கிராமத்தில் பணியாற்றினேன். அப்போது மாலை நேரத்தில் தன்னம்பிக்கை குறித்து வகுப்பு எடுக்கப்பட்டது. அப்போது, இந்தக் கதையை கேட்க நேரிட்டது. தற்போது இதனை தற்செயலாக ஒரு புத்தகத்தில் படித்தேன்.)

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

3 கருத்துகள்:

  1. பணத்திற்கு இருக்கும் மதிப்பு, மனிதனுக்கு இல்லை என்பதை உணர்த்தும் அருமையான கதை...

    பதிவாக்கித் தந்தமைக்கு பாராட்டுக்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. மனதில் பதிந்து கொள்ள வேண்டிய சிறப்பான கருத்து.

    பதிலளிநீக்கு