செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

வியாழன், ஆகஸ்ட் 02, 2012

சகோதர பாசத்தின் வெளிப்பாடு ‘ரக்க்ஷாபந்தன்’.!


சகோதர, சகோதரி பாசத்தை வெளிப்படுத்தும் ‘ரக்க்ஷாபந்தன்’ விழா இன்று (ஆகஸ்ட்-1) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சகோதரர்களாக பாவிக்கும் ஆண்களின் கையில் ராக்கி கயிற்றை கட்டி ஆசி பெறுவது இவ்விழாவின் சிற்பம்சம். பாசமுள்ள தங்கைக்கு பரிசுகளை அளிப்பதும், அன்பு செலுத்தும் அண்ணனுக்கு ராக்கி கயிறு கட்டி, இனிப்பு வழங்கி ஆசி பெறுவதால் பாசத்தின் எல்லை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. புராண கதைகளிலும் அண்ணன் - தங்கை பாசத்துக்கு எடுத்துக்காட்டாக மகாபாரத கதை விளங்குகிறது.


ஒரு சமயம் கிருஷ்ணனின் விரலில் காயம் காரணமாக ரத்தம் சொட்டியது. இதைப் பார்த்து திரவுபதி அதிர்ச்சியடைந்தார். உடனே பதறியடித்தப்படி, தான் அணிந்திருந்த புடவையை கிழித்து கிருஷ்ணனின் காயத்துக்கு கட்டுப்போட்டார். திரவுபதியின் பாசத்தில் நெகிழ்ந்த கிருஷ்ணன், ‘எதிர்காலத்தில் என்னுடைய உதவி உனக்கு எப்போது தேவைப்பாட்டாலும் ஓடோடி வருவேன்’ என்று வாக்குறுதி கொடுத்தார். அதன்படியே, துச்சாதனன் திரவுபதியின் துகிலுரித்தபோது கிருஷ்ணன் காப்பாற்றினார். திரவுபதி, கிருஷ்ணனின் காயத்துக்கு புடவையால் கட்டுபோட்ட நிகழ்வே இன்று ராக்கி கயிறாக கையில் கட்டப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.


ஒரு சமயம் மகாபலி சக்கரவர்த்தி ‘தன்னுடைய பிரதேசங்களை மகா பிரபுவாகிய தாங்கள் பாதுகாக்க வேண்டும்’ என்று விஷ்ணுவிடம் கோரிக்கை வைத்தார். அதை ஏற்ற விஷ்ணுவும், வைகுண்டத்தில் இருந்து கிளம்பி மகாபலி சக்கரவர்த்தியின் தேசங்களை காக்க சென்றார். விஷ்ணு இருக்கும் இடத்தில் தானும் இருக்க வேண்டும் என்று விரும்பிய மகாலட்சுமியும் வைகுண்டத்தை விட்டு வெளியேறி அந்தணர் பெண்ணாக மகாபலி சக்கரவர்த்தியிடம் அடைக்கலம் புகுந்தார்.

சிரவண பவுர்ணமி தினத்தில் மகாபலி சக்கரவர்த்தியின் கையில் லட்சுமிதேவி ராக்கி கயிறு கட்டினார். அண்ணன், தங்கை பாசத்துக்கு உதாரணமாக அன்று முதல் 'ரக்க்ஷாபந்தன்' கொண்டாடப்படுவதாகவும் வரலாற்று சுவடுகளில் கூறப்படுகிறது.
கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக