யூகோஸ்லாவியா நாட்டில் ஸ்கோப்ஜி என்ற சிறு கிராமத்தில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர் தெரசா. பிறந்தது 1910 ஆகஸ்ட் 27-ம் நாள். இளம் வயதிலேயே தந்தையை இழந்தவர். தாயால் வளர்க்கப்பட்டவர். 1929-ல் இந்தியாவிற்கு வந்தார். லோரட்டோ மடத்தின் கொல்கத்தா கிளையில் இருந்து கொண்டு பள்ளிக்கூடமொன்றில் ஆசிரியையாகப் பணியாற்றினார்.
அன்னை வசதியற்ற வீட்டுப் பிள்ளைகளுக்குத்தாமே கல்வி கற்பித்திருக்கி றார்.ஆதரவற்ற முதியோர்களுக்கு அடைக்கலம் தந்திருக்கிறார். நோய் வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் இருந்தவர்களைத் தத்தெடுத்து அவர்கள் நிம்மதியாய் மரணத்தை ஏற்கச் செய்வதற்காக ‘நிர்மல் இதயம்’ என்ற ஆசிரமத்தை ஏற்படுத்தினார்.
மனிதனின் முதல் தேவை அன்புதான் என்பதை உணர்ந்த தெரசா, தொழு நோயாளிகளுக் கும், எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் சேவையை விரிவுபடுத்தினார். தொழு நோயாளிகளுக்கு என்று ‘ப்ரேம் நிவாஸ்’ இல்லம் தொடங்கினார். அன்னையின் தொண்டு இந்தியாவோடு நின்றுவிடவில்லை. ஆஸ்திரேலியா, வெனிசுலா, கொலம்பியா, ஜோர்டான், ஏமன், ரோம், பொலிவியா ஆகிய நாடுகளிலும் கிளை விரித்திருக்கிறது.
1962-ல் பத்மஸ்ரீ விருது, 1962-ல் பிலிப்பைன்ஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதான ‘ராமோன் மக்ஸேஸே’ விருது, 1971-ல் போப் ஆண்டவரின் உலக சமாதானப் பரிசு, அமெரிக்காவின் ‘நல்ல சமாரித்தான் விருது’, 1972-ல் சர்வதேச நேரு சமாதனாப் பரிசு, 1976-ல் சாந்தி நிகேதனில் டாக்டர் பட்டம் இவை அன்னை பெற்ற விருதுகளில் குறிப்பிடத்தக்கவை.
இந்திய அரசு அவருடைய நினைவாய் தபால் தலை வெளியிட்டிருக்கிறது. 1980-ல் ‘பாரத ரத்னா’ விருது வழங்கிக் கவுரவித்தது. அன்னை தெரசாவின் பணியைப் போற்றும் உலக அமைதிக்கான நோபல் பரிசு 1979-ல் வழங்கப்பட்டது. வாட்டிகன் நகரம் ‘புனிதர்’ பட்டத்தை வழங்கியுள்ளது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். இப்படி,தமது வாழ்வின் ஒவ்வொரு நாளையும் மற்றவர்களின் நலனுக்காகவே செலவிட்ட அன்னை 1997-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் நாள் மரணமடைந்தார்.
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக