செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

சனி, ஆகஸ்ட் 04, 2012

ராணுவ வீரருக்கு வெள்ளி பதக்கம்.!



ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் விஜய் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். 03-08-2012 அன்று நடைபெற்ற 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் 30 புள்ளிகளைப் பெற்று விஜய்குமார் இந்த சாதனையை நிகழ்த்தினார். 112 ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவுக்கு கிடைத்த 22 ஆவது பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதே பிரிவில் கியூபாவின் லியூரிஸ் பபோ 34 புள்ளிகளுடன் தங்க பதக்கத்தையும், சீனாவின் டிங் ஃபென் 27 புள்ளிகளுடன் வெணகலப் பதக்கமும் வென்றனர். 


இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த 2-வது பதக்கம் இதுவாகும். முன்னதாக 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவில் ககன் நரங் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.தான் பங்கேற்ற முதல் ஒலிம்பிக் போட்டியி லேயே பதக்கம் வென்றுள்ளார் விஜய் குமார். பெரிய அளவில் இவர் மீது எதிர்பார்ப்பு இல்லை யென்றாலும் சிறப்பாக விளையாடி வெள்ளி பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமைச் சேர்த்துள்ளார். 2010 தில்லி காமன்வெல்த் போட்டியில் விஜய்குமார் மூன்று தங்கமும், ஒரு வெள்ளியும் வென்றுள்ளார்.


26 வயதான விஜய்குமார் இமாச்சல பிரதேசம் ஹமிர்புர் மாவட்டத்தில் உள்ள ஹர்சோர் கிராமத்தை சேர்ந்தவர். இந்திய ராணுவத்தில் பணியாற்றும் விஜய் குமார், 2 ஆம் நிலை அதிகாரி அந்தஸ்தான சுபேதாராக உள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை இந்தியாவுக்கு துப்பாக்கிச்சுடுதலில் நான்கு பதக்கங்கள் கிடைத்துள்ளன. 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் வெள்ளியும், 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் அபிநவ் பிந்த்ரா தங்கமும் வென்றிருந்தனர். தற்போது லண்டன் ஒலிம்பிக்கில் ககன்நரங் வெண்கலமும், விஜய்குமார் வெள்ளியும் வென்றுள்ளனர்.

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

3 கருத்துகள்:

  1. வாழ்த்துவோம்.. பெருமைப்படுவோம்...
    நன்றி…

    பதிலளிநீக்கு
  2. 'எனது வலைப்பதிவு பட்டியலில்' எனது வலைப்பூவையும் இணைத்து விட்டீர்களா?
    மிக்க மகிழ்ச்சி!
    அடுத்து போட பதிவு ரெடியாகிக் கொண்டுள்ளது... விரைவில், இறை நாட்டப்படி.

    பதிலளிநீக்கு