செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

வெள்ளி, ஆகஸ்ட் 03, 2012

தேசிய விளையாட்டு ‘ஹாக்கி’ அல்ல.!



நமது நாட்டின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்று நாம் அனைவரும் கூறி வரும் நிலையில், நாட்டின் தேசிய விளையாட்டு என்ற அந்தஸ்து எந்த விளையாட்டுக்கும் அளிக்கப்படவில்லை என மத்திய விளையாட்டு அமைச் சகம் கூறியுள்ளது. ஆனால், இந்திய அரசு இணையதளமான www.india.gov.in ல் இந்திய தேசிய விளையாட்டு என்ற தலைப்பில் ஹாக்கி குறிப்பிடப்பட்டு ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது.


இந்நிலையில், லக்னோவைச் சேர்ந்த ஐஸ்வர்யா பிரஷார் என்ற 10 வயது சிறுமி சார்பில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவல கத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் இந்தியாவின் தேசிய கீதம், விளையாட்டு, விலங்கு, மைதானம், மலர், தேசிய சின்னம் ஆகியவை குறித்து அறிவிப்புகளின் அதிகாரப்பூர்வ நகல்களை அளிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு பிரதமர் அலுவலகத்தில் இருந்து உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. உள்துறை அமைச்சகம் தேசிய விளை யாட்டு தொடர்பான விசாரணை என்பதால் விளையாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தது.


இதுதொடர்பாக, ஐஸ்வர்யாவுக்கு பதில் தெரிவித்து விளையாட்டு அமைச்சக செயலாளர் சிவபிரதாப் சிங் கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘இந்தியாவின் தேசிய விளையாட்டு என்று எதையும் விளையாட்டு அமைச்சகம் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கவில்லை’ என்று தெரிவித்துள்ளார். இந்திய அரசு இணையதளத்தில் தேசிய விளையாட்டு ஹாக்கி என்று இடம் பெற்று உள்ள நிலையில், நமது நாட்டுக்கு தேசிய விளையாட்டு என்று எதுவும் கிடையாது என்று விளையாட்டு அமைச்சகம் கூறியுள்ளது சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக