அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ அனுப்பிய ‘கியூரியாசிட்டி’ ரோவர் விண்கலம், வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அடுத்த கட்டமாக, செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப வேண்டுமானால், அவர்களுடன் தகவல் தொடர்பு ஏற்படுத்துவது முக்கிய மாகும். நாசாவின் ‘டீப் ஸ்பேஸ் நெட்வொர்க்’ (டிஎஸ்என்), பூமியிலிருந்து மற்ற கிரகங்களுக்கு அனுப்பப்படும் விண்கலத் துடன் தொடர்பு கொள்வதற்கான அதி நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.
அதற்காக, ‘நாசா’ நிறுவனத்தில் இருந்து அதன் நிர்வாகியும் விஞ்ஞானி யுமான சார்லஸ் போல்டன் தனது குரலை ஒலிப்பதவு செய்து ‘கியூரியாசிட்டி’ விண்கலத் துக்கு நவீன அறிவியல் தொழில்நுட்ப உதவியுடன் அனுப்பி வைத்தார். அவருடைய குரல் செவ்வாய் கிரகத்தில் ஒலித்ததுடன், மீண்டும் அந்த குரல் பூமிக்கும் வெற்றி கரமாக திரும்பி வந்தது குறிப்பிடத்தக்கது.
விஞ்ஞானி போல்டன் அந்த ஒலிப்பதவில், “கியூரியாசிட்டி விண்கலம் பூமிக்கு பல நன்மைகளை சேர்க்கும். செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் கால் பதிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதால், புதிய தலைமுறை விஞ்ஞானி களுக்கு இந்த விண்கலம் ஊக்கமளிப்பதாக இருக்கும்” என்று பேசி இருந்தார். பூமிக்கு திரும்பி வந்த ஒலிப்பதிவும், கியூரியாசிட்டி அனுப்பிய செவ்வாய் கிரக தரைப்பகுதியின் வண்ணப்படமும் கலிபோர்னியாவில் ஆகஸ்ட், 28, 2012 அன்று வெளியிடப்பட்டது.
நாசாவின் கியூரியாசிட்டி திட்ட அதிகாரி தவே லாவெரி கூறியது: ரோவர் விண்கலம் குரல் பதிவை அனுப்பி இருப்பது, பூமிக்கு அப்பால் மனிதன் வசிப்பதற்கான சாத்தியக் கூறை ஆராயும் முயற்சியின் அடுத்த படிக்கல்லாக அமைந்துள்ளது. இதன் மூலம், செவ்வாய் கிரகத்தில் முதன்முதலாக காலடி எடுத்து வைப்பவர், உயிருடன் இருக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது என்றார்.
கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் உங்கள் பாலமுருகன்.
-logon: saffroninfo.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக