செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

வெள்ளி, ஜனவரி 10, 2014

நேசித்தவர்களை விட வெறுத்தவர்களே அதிகம்...!

 பா.ஜ.க.மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தீவிர ஆர்.எஸ்.எஸ்.தொண்டர் என்ற அடையாளத்தினா லேயே அவரை நேசித்தவர்களைவிட, விரும்பாதவர் களே அதிகம். அதை அறிந்திருந்தபோதும் அதற்காக வருந்தாமல், தன் அடையாளத்தை இழக்க விரும்பாத துணிவான அரசியல்வாதி. இன்றைக்கு பாகிஸ்தானின் ஒரு முக்கிய நகராகயிருக்கும் கராச்சி, பிரிவினைக்கு முன் இந்தியாவின் ஓர் அங்கமாயிருந்தபோது, அங்கு பிறந்து வளர்ந்தவர் அத்வானி. நல்ல வசதியான, தெய்வ பக்தி நிரம்பிய சிந்தி குடும்பத்தில் பிறந்தவர். தொடக்க நாட்களில் கிரிக்கெட், டென்னிஸ் விளையாட்டுகளில் மட்டுமே ஆர்வமாக இருந்த அத்வானிக்கு, அரசியலை அறிமுகப்படுத்தியது அவரது பள்ளி நண்பர்.

அவருடன் ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஷாகாக்களுக்குச் சென்றவர், அதனால் ஈர்க்கப்பட்டு அதில் ஒன்றிப்போனார். அதற்கு முக்கியக் காரணம், தீ பிரிவினை என்பதையே அடியோடு ஆர்.எஸ்.எஸ். நிராகரித்ததுதான். கல்லூரிப் படிப்பை முடித்தபின் சில காலம் ஆசிரியப் பணியிலிருந்தபோது, தொடர்ந்த சமூக சேவைப் பணிகள் இவரது வாழ்க்கையில் ஒரு விபத்துக்கு வித்திட்டது.


கராச்சியில் நிகழ்ந்த ஒரு குண்டுவெடிப்புக்குக் காரணமான ஆர்.எஸ்.எஸ். காரர்களின் பட்டியலில் இவர் பெயரும் இருந்ததால் காவல்துறையிடம் இருந்து தப்ப, இந்தியாவிற்கு இடம் பெயர்ந்து, மும்பையில் சட்டம் படித்து, பின் முழுநேர அரசியல்வாதியானவர்.

ஆர்.எஸ்.எஸ்.ஸிலிருந்து பாரதிய ஜன சங்கம், ஜனதா மோர்ச்சா, ஜனதா என மாறி மாறி இவர் கடந்து வந்த அரசியல் பாதைகள், வலிகள் நிறைந்தவை. மொரார்ஜி தேசாய், சரண் சிங், வி.பி.சிங், சந்திரசேகர் போன்ற அரசியல்வாதிகள், தங்களை பலப்படுத்திக் கொண்டனர். தனது கட்சி தனித்து நிற்க, அதற்கு அகில இந்திய முகம் தேவை என உணர்ந்த அத்வானி, அதற்காகப் பாடுபடத் தொடங்கினார். எமர்ஜென்சி காலத்தின் கொடுமைகளிலிருந்து மீண்டு, கட்சியைக் கட்டமைத்து வெறும் 2 எம்.பி.க்களுடன் தொடங்கிய பா.ஜ.க.வை ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு வளர்த்தவர். 2002ல் வாஜ்பாயின் அரசில் துணை பிரதமராக இருந்தவர்.
கட்சியை வளர்க்க இவர் தேர்தெடுத்த ஓர் ஆயுதம் ரதயாத்திரைகள்.சோமநாத்தில் தொடங்கி, அயோத்தி வரை செல்லத் திட்டமிட்டு, வன்முறையில் முடிந்த முதல் யாத்திரையின் வெற்றியாகக் கருதப்பட்ட விசயம் பாபர் மசூதியின் இடிப்பு. ஹிந்துத்வா கோசத்தை ஓங்கி ஒலித்து தேர்தலில் வெற்றி பெற்றாலும், 1990 டிசம்பர் 6ல் நிகழ்ந்தது ஒரு தேசிய அவமானம் என்ற கறையையும் பெற்றுத் தந்தது. ஆனாலும், அத்வானி யாத்திரைகளைக் கைவிடவில்லை.

ஊழலுக்கு எதிராகவும், வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவரவும் வலியுறுத்தி, 38 நாட்கள் மக்கள் விழிப்புணர்வு யாத்திரை மேற்கொண்டார். 

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

புத்தகம் என்ன செய்யும்?

‘புத்தகம் என்ன செய்யும்? ஏன் புத்தகம் படிக்க வேண்டும்’ என்று கேட்பவர்களுக்கு என்றைக்குமான பதிலாக உள்ளது ஒரு திரைப்படம். அது பிரபல பிரெஞ்சு இயக்குநர் த்ரூபா இயக்கிய ‘Fahrenheit 451’ என்ற படம். அமெரிக்க எழுத்தாளரான ரேபிராட்பரி எழுதிய விஞ்ஞானப் புனைக் கதையை த்ரூபா படமாக்கி இருக்கிறார். த்ரூபா இயக்கிய ஒரே ஆங்கிலப் படம் அது. Fahrenheit-451 என்பது புத்தகங்கள் எரிவதற்கான உஷ்ண நிலை.


எதிர்கால அமெரிக்காவில் இக்கதை நடக்கிறது. அங்கே புத்தகங்கள் தடை செய்யப்பட்டு இருக்கின்றன. யாராவது புத்தகம் வைத்திருந்தால் அவரைக் கண்டுபிடித்து உடனே மனநல மருத்துவமனைக்கு அனுப்பிவிடுவார்கள். அவரது புத்தகங்கள் உடனடியாகத் தீ வைத்து எரிக்கப்படும். அப்படி தீ எரிப்பதற்கு என்று தனியே இந்தப் படத்தின் கதாநாயகன் மாண்டெக் வேலை செய்கிறான். எவருடைய வீட்டிலாவது புத்தகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாகத் தீ எரிப்புத் துறையில் அபாய மணி அடிக்கப்படும். தீ வைப்பதில் தேர்ச்சி பெற்ற வீரர்கள் அங்கே அனுப்பி வைக்கப்பட்டு, புத்தகங்களை கொளுத்தி வருவார்கள்.

ஒருநாள், வயதான பெண் ஒருவருடைய வீட்டில் புத்தகங்கள் கைப்பற்றப் பட்டு எரிக்கப்படுகின்றன. அப்போது புத்தகத்தில் இருந்து ஒரு வரியைத் தற்செயலாகப் படிக்கிறான் மாண்டெக்.அந்த வரியின் ஈர்ப்பில் புத்தகத்தைத் திருடிக் கொள்கிறான். தன்னைப் புத்தகங்களில் இருந்து பிரிக்க முடியாது என்று மல்லுக்கட்டும் வயதான பெண் தன்னைக் கொளுத்திக் கொள்கிறாள். புத்தகங்களுக்காக ஒரு பெண் ஏன் தற்கொலை செய்து கொள்கிறாள் என்று மாண்டெக்கால் அப்போது புரிந்து கொள்ள முடியவில்லை.


ரேபிராட்பரி
 தன் மனைவியிடம் தான் ஒரு புத்தகம் திருடி வந்ததைப் பற்றிச் சொல்லி, அதில் உள்ள வரிகள் அவன் வாழ்க்கையைப் புரிந்து கொள்வதற்கு நெருக்கமாக உள்ளதாகச் சொல்கிறான். அதன் பிறகு தீ வைக்கச் செல்லும் இடங்களில் புத்தகங்களைத் திருடி வந்து படிக்கிறான் மாண்டெக். திருடிய புத்தகங்களைப் பிறர் அறியாமல் வீட்டினுள் ஒளித்து வைக்கிறான். புத்தகங்களைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்வதற்காக பேபர் என்ற பேராசிரியரை தேடிப் போகிறான். இருவரும் புத்தகம் பற்றி நிறையப் பேசுகிறார்கள்.

மனித குலம் அதன் கடந்த காலத்தை அறிந்து கொள்வதற்கு ஒரே வழிதான் இருக்கிறது. அது புத்தகம். மனிதக் கற்பனையின் மிக உயரிய விசயம் எழுத்து என்று அவர் புரியவைக்கிறார். அதற்குள் மாண்டெக் புத்தகம் படிக்கும் விசயம் அவன் மனைவியாலே அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டு, அவன் தேடப் படுகின்றான். அவனை வேட்டையாடு கிறார்கள்.
உயிர் பிழைப்பதற்காகத் தப்பி அலைகிறான். அப்படி அலையும்போது நடமாடும் புத்தகங்களாக உள்ள ஒரு குழுவினரைக் கண்டுபிடிக்கிறான். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை முழுவதாக மனப்பாடம் செய்து மனதிலே வைத்திருக்கிறார்கள். அந்தப் புத்தகங்களின் நடமாடும் வடிவம் போல அவர்கள் இருக்கிறார்கள். ஆகவே, உலகில் இருந்த புத்தகம் அப்படியே இருக்கிறது. அவர்கள் தங்களிடம் இருந்து மற்றவர்களுக்கு அந்த நினைவைப் பகிர்ந்துச் சொல்கிறார்கள்.


அந்தப் பணியில் இணைந்த மாண்டெக் பைபிளின் ஒரு பகுதியை முழுமையாக மனப்பாடம் செய்து, அவனும் ஒரு நடமாடும் புத்தகமாகி விடுகிறான். அந்ந நகரில் எதிர்பாராத யுத்தம் வெடிக்கிறது. குண்டு மழை பொழிகிறது. மனிதர்களைப் புத்தகங்களால் மட்டுமே மீட்க முடியும் என்று நடமாடும் மனிதர்கள் வேறு இடம் நோக்கிப் பயணம் செய்யத் தொடங்குகிறார்கள். அவர்களை வழி நடத்திப் போகிறான் மாண்டெக்.

த்ரூபாவின் இப்படம் புத்தகம் வெறும் காகிதமல்ல என்பதைத் தௌ¤வாகப் புரிய வைக்கிறது. கண்ணாடி நம் முகத்தைக் காட்டுகிறது என்றால், அகத்தைக் காட்டுவதற்குப் புத்தகங்கள் மட்டுமே இருக்கின்றன. புத்தகம் இன்னொரு பிரபஞ்சம். அதன் உள்ளே இந்த பிரபஞ்சத்தின் தீர்க்க முடியாத புதிர்களுக்கான பதில் காணப்படுகிறது. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் சுயமாக அனுபவித்து அறிய முடியாத அத்தனையும் புத்தகம் வழியாக மனிதர்களுக்கு எளிதாக அனுபவமாகிறது.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

வியாழன், ஜனவரி 09, 2014

குடும்ப உறவுகளுக்காக அரசியல்.!

நாடு அடிமைப்பட்டுக் கிடந்தபோது, விடுதலை அடைய வேண்டும் என்ற லட்சியம் காங்கிரஸ் கட்சிக்கு இருந்தது. சமூக விடுதலை அடையாமல் நாட்டு விடுதலையால் பயனில்லை என்று திராவிட இயக்கங்கள் போராடின. பொருளாதாரச் சுதந்திரம் இல்லாமல் நாட்டு விடுதலையால் எந்தப் பயனும் இல்லை என்று பொதுவுடைமை இயக்கங்கள் வாதாடின. நாடா, வர்க்கமா, சாதியா என்ற விவாதம் நடந்த காலக்கட்டம் அது.

சுதந்திரத்துக்குப் பிறகு ஆட்சியைப் பிடிப்பது, அதிகாரத்தைத் தக்கவைப்பது, இப்படித் தக்கவைப்பதற்காக எந்தக் கீழான காரியத்தையும் செய்வது, அந்தக் காரியங்களுக்காகப் பெரும் பணம் குவிப்பது, அதிகாரப் பசியைத் தீர்த்துக் கொள்ள யாரோடும் சேருவது ஆகிய ஐந்தும்தான் அனைத்து அரசியல் கட்சிகளின் நோக்கமாக உள்ளது. இதில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என எந்த வித்தியாசமும் இல்லை. இந்த நிலையை மாற்ற வேண்டும். உறுதி கொள்ளுங்கள் வாக்காளர்களே.!

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.


புத்தகங்கள் பற்றி...!

படைப்பது தவம். படிப்பது வரம் - கவிஞர் வைரமுத்து

மனிதர்களுடைய மனதின் கோணலை நேர்படுத்துவதுதான் புத்தகங்கள் - தமிழருவி மணியன்

ஒவ்வொரு புத்தகமும் ஒரு நல்ல துணைவன் - எஸ்.ராமகிருஷ்ணன்

ஒவ்வொரு நூலுமே எனக்கு மிகப்பெரிய பரிசு - இயக்குநர் வெற்றிமாறன்

புத்தகங்களைத் தொடும் போதே நாம் அனுபவத்தைத் தொடுகிறோம் - நா.முத்துக்குமார்

புத்தகங்களின் மூலமாக சொர்க்கத்தை நேரடியாக அறுவடை செய்ய முடியும் - தமிழச்சி தங்கபாண்டியன்

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

மாம்பழம் பழுக்க ராமதாஸ் புதுக்கணக்கு.!


மாம்பழம் சின்னத்தை தக்க வைக்கவே, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ், சமுதாய கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில், பா.ஜ.,வுடன் கட்டாயம் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற கருத்தும், அக்கட்சியில் வலுத்து வருகிறது.

தேர்தல் கமிஷனின் அங்கீகாரத்தை, அரசியல் கட்சிகள் பெற, பல நிபந்தனைகள் உள்ளன. ஒரு கட்சி மாநில கட்சிக்குரிய, அங்கீகாரத்தைப் பெற வேண்டும் எனில், லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில், 6 சதவீத ஓட்டுகளைப் பெறுவதோடு, குறிப்பிட்ட இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

சின்னம் பறிபோகும்:

தேர்தல் கமிஷனின் இந்த விதியை, 2009 லோக்சபா தேர்தலில், பூர்த்தி செய்ய, பா.ம.க., உட்பட, ஆறு மாநில கட்சிகள் தவறி விட்டன. அதற்கு காரணம், தேர்தலில், அந்தக் கட்சிகளுக்கு கிடைத்த படுதோல்வியே. அதனால், புதுச்சேரியில் பா.ம.க.,வின் அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பான அறிவிப்பை, 2010ல், தேர்தல் கமிஷன் வெளியிட்டது. மேலும், 2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட பா.ம.க.,வால், மூன்று தொகுதிகளில்மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இருப்பினும்,அக்கட்சி, மாநில அளவில், 5.2 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்றது.

வரும் லோக்சபா தேர்தலில், 6 சதவீதத்திற்கு அதிகமான ஓட்டுகள் அல்லது குறிப்பிட்ட இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே, பா.ம.க.,விற்கு மாம்பழம் சின்னம் சொந்தமாகும். இல்லையெனில், பா.ம.க.,வின் மாம்பழம் சின்னத்தை, தேர்தல் கமிஷன் பறிக்க வாய்ப்புள்ளது. இந்த இக்கட்டான தருணத்தில், வரும் தேர்தலில், ஏதாவது ஒரு அரசியல் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால், குறைவான தொகுதிகளில் மட்டுமே, பா.ம.க., போட்டியிட முடியும். அதனால், ஓட்டு சதவீதத்தை அதிகரித்து காட்ட முடியாது.

அதேநேரத்தில், ஜாதி அமைப்புகளை இணைத்து, தற்போது உருவாக்கியுள்ள, சமுதாயகூட்டணி சார்பில், மாநிலம் முழுவதும் உள்ள தொகுதிகளில், பா.ம.க., சார்பில், பலர் போட்டியிட்டால், தேர்தல் கமிஷன் இலக்கான, 6 சதவீதம் ஓட்டுகளை பெற முடியும் என்பதே, ராமதாசின் கணக்கு.அதாவது, பா.ம.க., தனித்துப் போட்டியிட்டால், வன்னியர்களின் ஓட்டுகளை மட்டுமே பெற முடியும்; மற்ற ஜாதியினர் ஏறிட்டுப் பார்க்க மாட்டார்கள். சமுதாய கூட்டணி எனில், மற்ற ஜாதியினரும், பா.ம.க., சார்பில், தேர்தலில் நிற்பர். ஏராளமான வேட்பாளர்கள், பா.ம.க.,வின் மாம்பழம் சின்னத்தில் நிற்கும் போது, ஓட்டு சதவீதம் அதிகரிக்கும், அதனால், சின்னத்தை தக்க வைத்துக் கொள்ளலாம் என்பதும், அவரின் மற்றொரு கணிப்பு.




தந்தைக்கு எதிராக:அதேநேரத்தில், 'வரும் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே, கட்சியினரை தக்கவைக்க முடியும்' என, பா.ம.க., இளைஞர் அணி செயலர் அன்புமணி நினைக்கிறார். பா.ம.க., சார்பில், வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளவர்களின் மனநிலையும் அதுவாகவே உள்ளது. அதனால், இந்த விஷயத்தில், தந்தை ராமதாஸ் முடிவுக்கு எதிராக, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்கவும், விஜயகாந்தின், தே.மு.தி.க., அந்தக் கூட்டணியில் சேர்ந்தாலும், ஆதாயம் கருதி, அதை ஏற்றுக் கொள்ளவும், அன்புமணி திட்டமிட்டுள்ளதாகக் தெரிகிறது.