விகடன் இணையளத்தில் வெளிவந்த எனது கட்டுரை
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற சொல், எதுக்கு பொருந்துகிறதோ இல்லையோ... 'கட்செவி அஞ்சல்' எனப்படும் 'வாட்ஸ்அப்புக்கு நன்றாகவே பொருந்தும். நவீன தகவல் தொடர்பு சேவைகளை தரும் அப்ளிகேஷன்களில் வாட்ஸ்ஆப் முன்னிலையில் இருக்கிறது. கடந்த இரண்டாம் தேதி நிலவரப்படி, உலகில் 100 கோடி பயனாளர்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர் என அதன் உரிமையாளரும், ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவருமான மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்திருக்கிறார்.
உலகில் 7ல் ஒருவர் கையில் வாட்ஸ்அப்
அதாவது உலகில் 7 பேரில் ஒருவர் வாட்ஸ் அப் பயன்படுத்துகிறார். இந்தியாவில் வைபர், ஹைக், லைன் என கடும் போட்டியை தரும் ‘ஆப்கள்’ இருந்தாலும், 'வாட்ஸ்ஆப்'பையே பயனாளர்கள் அதிகம் விரும்புகின்றனர். இது வரவேற்கக் கூடியதுதான் என்றாலும், தற்போதைய சூழலில் வாட்ஸ்அப் பயன்பாடு எப்படியிருக்கிறது?
அதாவது உலகில் 7 பேரில் ஒருவர் வாட்ஸ் அப் பயன்படுத்துகிறார். இந்தியாவில் வைபர், ஹைக், லைன் என கடும் போட்டியை தரும் ‘ஆப்கள்’ இருந்தாலும், 'வாட்ஸ்ஆப்'பையே பயனாளர்கள் அதிகம் விரும்புகின்றனர். இது வரவேற்கக் கூடியதுதான் என்றாலும், தற்போதைய சூழலில் வாட்ஸ்அப் பயன்பாடு எப்படியிருக்கிறது?
வாட்ஸ்அப் பயன்பாட்டாளர்கள் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் இருக்கிறார்களோ என்ற எண்ணம் வெகுநாட்களாவே மனதில் உருண்டோடுகிறது. தமக்கென்று ஒரு கொள்கையோ, கருத்தோ இல்லாமல் பிறர் அனுப்பிய கதைகள், கட்டுரைகள், படங்கள், வீடியோக்கள் என எல்லாவற்றையும் அப்படியே ஃபார்வர்டு செய்வதில்தான் ஆர்வமும், வேகமும் காட்டுகிறார்களே தவிர, பகிரப்படும் பதிவில் இருக்கும் உண்மைத்தன்மை என்ன? அது சரியானா தகவல்தானா? நாம் அனுப்புவதால் ஏற்படும் விளைவு என்ன? என்ற எண்ணம் சிறிதளவு கூட இல்லாமல் இருக்கிறார்களே என்ற ஆதங்கமும் ஏற்படுகிறது.
பல்லை காட்டுவார்கள்
ஃபார்வர்டு செய்யும் தகவல்களை முழுமையாக அவர்கள் படித்திருப்பார்களா என்றால் அதுவும் இல்லைதான். ஒருவர் ஃபார்வர்டு செய்யும் ஒரு பதிவுக்கு மற்றொரு குழுவில் நான்கைந்து பாராட்டுகள் வரும். அதை புன்முறுவலுடன் அவர் ஏற்றுக் கொள்வார். அதே அந்தப் பதிவுக்கு எதிர்ப்பும், கண்டனமும் ஏற்பட்டால், நண்பர் அனுப்பினார், தெரிந்தவர் அனுப்பினார் அல்லது வேறொரு குழுவில் இருந்து வந்ததை அப்படியே அனுப்பினேன் என்று சம்பந்தப்பட்ட நபர் பல்லை காட்டுவார்.
எந்தவொரு கருத்தையும் நாம் முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது தமது கருத்துக்கு ஒவ்வாததாக இருந்தாலும், அதைப் பிறருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற ஆவல் இருந்தால், அந்தப் பதிவுக்கு முழு பொறுப்பு எடுத்துக் கொண்ட பிறகுதான் பிறருக்கு அனுப்ப வேண்டும். அதாவது வாட்ஸ்ஆப் பயன்பாட்டிலே கூற வேண்டுமானால் ஃபார்வர்டு செய்ய வேண்டும். அதைவிடுத்து பெரும்பாலோனோர் வெறுமனே படங்களையும், வீடியோக்களையும் ஃபார்வடு செய்வதால் மிஞ்சுவது எரிச்சல் மட்டும்தான்.
எந்தவொரு கருத்தையும் நாம் முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது தமது கருத்துக்கு ஒவ்வாததாக இருந்தாலும், அதைப் பிறருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற ஆவல் இருந்தால், அந்தப் பதிவுக்கு முழு பொறுப்பு எடுத்துக் கொண்ட பிறகுதான் பிறருக்கு அனுப்ப வேண்டும். அதாவது வாட்ஸ்ஆப் பயன்பாட்டிலே கூற வேண்டுமானால் ஃபார்வர்டு செய்ய வேண்டும். அதைவிடுத்து பெரும்பாலோனோர் வெறுமனே படங்களையும், வீடியோக்களையும் ஃபார்வடு செய்வதால் மிஞ்சுவது எரிச்சல் மட்டும்தான்.
அப்படியே ஃபார்வர்டு செய்பவர்கள் யோசிக்க வேண்டும்
அண்மையில் ஒரு பதிவு வாட்ஸ்அப்பில் சுற்றிச் சுற்றி வந்தது. குடியரசு நாள் கொண்டாட்டத்தின் போது, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த திலீபன் என்றொரு இளைஞர், தேசியக் கொடியை எரிப்பது போன்ற ஒரு படமும், அதுதொடர்பான மேலும் சில படங்களும் வாட்ஸ்அப்பில் மின்னல் வேகத்தில் வெளியாகின. குறைந்தது மூன்று நாட்கள் அந்த பதிவுகள் தொடர்ந்து அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் சுற்றி வந்தது. இதில் என்னவென்றால், ஒரு வாட்ஸ்அப் குழுவில் இருப்பவர் அந்த படத்தை பதிவு செய்துவிட்டாரே என்று எண்ணாமல், அந்த குழுவில் இருக்கும் இன்னும் பலர், மூன்று நாட்களிலும் ஏறக்குறைய ஏழெட்டு முறை அனுப்பி இந்திய தேசத்தின் மீதுள்ள தன் அன்பையும், கொடியை எரித்த நபர் மீதான கோபத்தையும் வெளிப்படுத்தினார்கள்.
அதோடு நில்லாமல், இதை எல்லா குழுவிற்கும் அனுப்புங்கள் என்ற 'அன்பு கட்டளை' வேறு. இதுமட்டுமல்லாமல், இந்தியாவையும், இந்திய தேசத்தையும் களங்கப்படுத்திவிட்டார், அவமானப்படுத்தி விட்டார் என்று எல்லோரும் பொரிந்து தள்ளிவிட்டார்கள். அதுபோகட்டும் என்றால், இரு நாட்கள் கழித்து, தேசியக் கொடியை நான் ஏன் எரித்தேன்? என்றொரு நீண்டப் பதிவு வந்தது. அதாவது தேசியக் கொடியை எரித்ததற்கு திலீபன் கூறும் 'நியாய'மான பதிவு அது. அதனை போட்டி போட்டுக் கொண்டு மாறி மாறி இரு நாட்கள் அனுப்பி தீர்த்து விட்டார்கள். இன்னும் ஒரு மாதம் கழித்துக்கூட ஏதாவது ஒரு வாட்ஸ்ஆப் குழுவில் ஃபார்வர்டு செய்யப்படும். இதிலிருந்து ஒரு விசயம் புரிந்தது. ஏற்கனவே இளைஞரை திட்டித் தீர்த்தவர்கள்தான், அவரை கைது செய்ய வேண்டும் என்று முழங்கியவர்கள்தான், மீண்டும் அவரது சமாளிப்பு பதிவையும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். வாட்ஸ்அப் பயனாளர்களுக்கென்று, ஒரு கருத்தும், கொள்கையும் கிடையாதா? வந்ததை அப்படியே ஃபார்வர்டு செய்கிறேன் பேர்வழி என்று இருப்பது எந்த விதத்தில் சரியாகும்?
அண்மையில் ஒரு பதிவு வாட்ஸ்அப்பில் சுற்றிச் சுற்றி வந்தது. குடியரசு நாள் கொண்டாட்டத்தின் போது, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த திலீபன் என்றொரு இளைஞர், தேசியக் கொடியை எரிப்பது போன்ற ஒரு படமும், அதுதொடர்பான மேலும் சில படங்களும் வாட்ஸ்அப்பில் மின்னல் வேகத்தில் வெளியாகின. குறைந்தது மூன்று நாட்கள் அந்த பதிவுகள் தொடர்ந்து அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் சுற்றி வந்தது. இதில் என்னவென்றால், ஒரு வாட்ஸ்அப் குழுவில் இருப்பவர் அந்த படத்தை பதிவு செய்துவிட்டாரே என்று எண்ணாமல், அந்த குழுவில் இருக்கும் இன்னும் பலர், மூன்று நாட்களிலும் ஏறக்குறைய ஏழெட்டு முறை அனுப்பி இந்திய தேசத்தின் மீதுள்ள தன் அன்பையும், கொடியை எரித்த நபர் மீதான கோபத்தையும் வெளிப்படுத்தினார்கள்.
அதோடு நில்லாமல், இதை எல்லா குழுவிற்கும் அனுப்புங்கள் என்ற 'அன்பு கட்டளை' வேறு. இதுமட்டுமல்லாமல், இந்தியாவையும், இந்திய தேசத்தையும் களங்கப்படுத்திவிட்டார், அவமானப்படுத்தி விட்டார் என்று எல்லோரும் பொரிந்து தள்ளிவிட்டார்கள். அதுபோகட்டும் என்றால், இரு நாட்கள் கழித்து, தேசியக் கொடியை நான் ஏன் எரித்தேன்? என்றொரு நீண்டப் பதிவு வந்தது. அதாவது தேசியக் கொடியை எரித்ததற்கு திலீபன் கூறும் 'நியாய'மான பதிவு அது. அதனை போட்டி போட்டுக் கொண்டு மாறி மாறி இரு நாட்கள் அனுப்பி தீர்த்து விட்டார்கள். இன்னும் ஒரு மாதம் கழித்துக்கூட ஏதாவது ஒரு வாட்ஸ்ஆப் குழுவில் ஃபார்வர்டு செய்யப்படும். இதிலிருந்து ஒரு விசயம் புரிந்தது. ஏற்கனவே இளைஞரை திட்டித் தீர்த்தவர்கள்தான், அவரை கைது செய்ய வேண்டும் என்று முழங்கியவர்கள்தான், மீண்டும் அவரது சமாளிப்பு பதிவையும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். வாட்ஸ்அப் பயனாளர்களுக்கென்று, ஒரு கருத்தும், கொள்கையும் கிடையாதா? வந்ததை அப்படியே ஃபார்வர்டு செய்கிறேன் பேர்வழி என்று இருப்பது எந்த விதத்தில் சரியாகும்?
256 இனி போட்டியை அதிகரிக்கும்
சரி இதுபோகட்டும், வெட்டி அரட்டை, வீண்பேச்சு, தமிழ் மொழி, அறிவியல், மருத்துவம், கல்வி, செய்திக்கதிர், விளையாட்டு, தல, தளபதி, சினிமா, அரசியல் என பல்வேறு வாட்ஸ்அப் குழுக்கள் இருக்கின்றன. ஒருவர் அவருக்கு ஏற்றாற்போல், ஏறக்குறைய 5-லிருந்து 15 குழுக்களில் இடம்பெற்றிருக்கிறார். ஒவ்வொரு குழுவிலும் அவர் விரும்பியோ, விரும்பாமலோ இடம் பெற்றுவிடுவார் அது தனிகதை. இப்பொழுது ஒரு குழுவில் நூறு பேர்தான் இடம் பெற முடியும் என்ற கட்டுப்பாடும் தளர்த்தப்பட்டு, 256ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இனி குழுவை முழுமைப் பெற வைக்க ஒரு போட்டியே நடக்கும். ஒரு குழுவில் பலர் இடம்பெற்றிருக்கும் போது, பல்வேறு மாறுப்பட்ட கருத்துகள் கிடைக்கப் பெறும். பல புதிய தகவல்கள் இடம்பெறும். அந்த வகையில் இது நல்ல விசயம்தான். சுமார் நூறு பேர் இருக்கும் குழுவில் ஒரு பதிவு அனுப்பப்படுகிறது என்றால், குறைந்தது 20லிருந்து 30 பேர் வரை தான் முதல் ஒரு மணி நேரத்தில் படிக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் அந்த நாள் முழுவதிலும் ஏதோ ஒரு நேரத்தில் படிக்கிறார்கள். இதனால் என்ன ஆகிறது?
ஒரு நாளில், ஒரு குழுவில் குறைந்தபட்சம் 50 பதிவுகள் வந்திருக்கும். இதை யாரும் முழுமையாக படிப்பதில்லை. ஒரே நேரத்தில் எல்லா பதிவுகளும் சேர்த்திருப்பதால் மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் ஸ்குரோல் செய்து விட்டுவிடுகிறார்கள். என்ன நடந்தது? என்ன பதிவு வந்தது? என்று பார்க்காமல், படிக்காமல், இரு நாட்கள் கழித்து, இதே குழுவில் வந்த பதிவுகளை, அதிலுள்ள நண்பர்கள் மீண்டும் ஒரு முறை திருப்பி அனுப்புவார். இது மற்றவர்களுக்கு எந்த வகையில் பயன் தரும்? இந்த பதிவு மூன்று நாளைக்கு முன்னரே வந்துவிட்டது. இதை மீண்டும் பதிவு செய்யாதீர்கள் என்று, அந்த குழு அட்மினோ, வேறு ஒரு நபரோ தெரிவிப்பார். அதற்கு இளித்துக் கொண்டு சரி என்று அந்த நபரும் தெரிவிப்பார்.
சரி இதுபோகட்டும், வெட்டி அரட்டை, வீண்பேச்சு, தமிழ் மொழி, அறிவியல், மருத்துவம், கல்வி, செய்திக்கதிர், விளையாட்டு, தல, தளபதி, சினிமா, அரசியல் என பல்வேறு வாட்ஸ்அப் குழுக்கள் இருக்கின்றன. ஒருவர் அவருக்கு ஏற்றாற்போல், ஏறக்குறைய 5-லிருந்து 15 குழுக்களில் இடம்பெற்றிருக்கிறார். ஒவ்வொரு குழுவிலும் அவர் விரும்பியோ, விரும்பாமலோ இடம் பெற்றுவிடுவார் அது தனிகதை. இப்பொழுது ஒரு குழுவில் நூறு பேர்தான் இடம் பெற முடியும் என்ற கட்டுப்பாடும் தளர்த்தப்பட்டு, 256ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இனி குழுவை முழுமைப் பெற வைக்க ஒரு போட்டியே நடக்கும். ஒரு குழுவில் பலர் இடம்பெற்றிருக்கும் போது, பல்வேறு மாறுப்பட்ட கருத்துகள் கிடைக்கப் பெறும். பல புதிய தகவல்கள் இடம்பெறும். அந்த வகையில் இது நல்ல விசயம்தான். சுமார் நூறு பேர் இருக்கும் குழுவில் ஒரு பதிவு அனுப்பப்படுகிறது என்றால், குறைந்தது 20லிருந்து 30 பேர் வரை தான் முதல் ஒரு மணி நேரத்தில் படிக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் அந்த நாள் முழுவதிலும் ஏதோ ஒரு நேரத்தில் படிக்கிறார்கள். இதனால் என்ன ஆகிறது?
ஒரு நாளில், ஒரு குழுவில் குறைந்தபட்சம் 50 பதிவுகள் வந்திருக்கும். இதை யாரும் முழுமையாக படிப்பதில்லை. ஒரே நேரத்தில் எல்லா பதிவுகளும் சேர்த்திருப்பதால் மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் ஸ்குரோல் செய்து விட்டுவிடுகிறார்கள். என்ன நடந்தது? என்ன பதிவு வந்தது? என்று பார்க்காமல், படிக்காமல், இரு நாட்கள் கழித்து, இதே குழுவில் வந்த பதிவுகளை, அதிலுள்ள நண்பர்கள் மீண்டும் ஒரு முறை திருப்பி அனுப்புவார். இது மற்றவர்களுக்கு எந்த வகையில் பயன் தரும்? இந்த பதிவு மூன்று நாளைக்கு முன்னரே வந்துவிட்டது. இதை மீண்டும் பதிவு செய்யாதீர்கள் என்று, அந்த குழு அட்மினோ, வேறு ஒரு நபரோ தெரிவிப்பார். அதற்கு இளித்துக் கொண்டு சரி என்று அந்த நபரும் தெரிவிப்பார்.
'அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு '
இதுபோன்ற உரையாடல்கள் நல்ல தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும், அறிந்து கொள்ள வேண்டும் என்று இருப்பவர்களுக்கு எரிச்சலடையச் செய்வதோடு, நாளடைவில் அவர் பதிவு செய்யும் பதிவுகளை குறைத்துக் கொண்டு அமைதிக் காப்பார். இறுதியில் குழுவுக்கு நன்றி தெரிவித்துவிட்டு வெளியேறிவிடுவார். இதெல்லாம் பரவாயில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஒருவர் விபத்தில் சிக்கிவிட்டார் என்றும், புற்றுநோய்க்கு அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இலவச மருந்தை தருகிறது என்றும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் அவலங்கள் என்றும், அதிக நோபல் பரிசு பெற்ற நாடு எது தெரியுமா என்றும் கேட்கப்படும் பதிவுகளை ஓராண்டிற்கும் மேலாக, (நான் ஒரு வருடமாக வாட்ஸ்அப்பில் இருப்பதால் சொல்கிறேன்) பதிவு செய்யப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இதில் இருக்கின்ற உண்மைத் தன்மைக்கு யார் பொறுப்பு? கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் எழுதலாம், அதை பிறருக்கு ஃபார்வர்டு செய்து நம்ப வைக்கலாம் என்ற எண்ணம் சரியா? இதை தொடர்புடையவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பல தரப்பட்ட குழுக்களில் ஒருவர் இருப்பதால், ஏராளமான தகவல்கள் கிடைக்கப் பெறும். நல்ல விஷயங்கள் தெரியவரும். அதையெல்லாம், சான்றுக்கு மேற்கூறிய சில ஃபார்வர்டு பதிவுகளால் படிக்க முடியாமல் சோர்வுற்றுவிடுகிறார்கள். எனவே, வாட்ஸ்அப் பயனாளர்கள் இரண்டு விசயங்களை உள்வாங்கி கொள்ளுங்கள். ஒன்று, உங்களுக்கு கிடைக்கும் எந்த தகவலாக இருந்தாலும், அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொண்டு பிறருக்கு பரிந்துரை செய்யுங்கள். இல்லையென்றால் நீங்கள் மட்டுமே படித்து தெரிந்து கொள்ளுங்கள். இரண்டாவது, வரும் எல்லா தகவல்களையும் படித்தாயிற்று, வேண்டபட்டவர்களுக்கு ஃபார்வர்டு செய்துவிட்டாகிவிட்டது என்றால், அதை அழித்துவிடுங்கள். ஒருவேளை சில பதிவுகள் தேவைபடுகிறது என்றால் அதை மட்டும் வைத்து கொண்டு மீதமுள்ளவற்றை அழித்துவிடுங்கள். எதுவும் அளவுக்கு மீறாமல் இருப்பதே நலம். மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும். இது வாட்ஸ்அப்புக்கும் அப்படியே பொருந்தும்!
இதுபோன்ற உரையாடல்கள் நல்ல தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும், அறிந்து கொள்ள வேண்டும் என்று இருப்பவர்களுக்கு எரிச்சலடையச் செய்வதோடு, நாளடைவில் அவர் பதிவு செய்யும் பதிவுகளை குறைத்துக் கொண்டு அமைதிக் காப்பார். இறுதியில் குழுவுக்கு நன்றி தெரிவித்துவிட்டு வெளியேறிவிடுவார். இதெல்லாம் பரவாயில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஒருவர் விபத்தில் சிக்கிவிட்டார் என்றும், புற்றுநோய்க்கு அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இலவச மருந்தை தருகிறது என்றும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் அவலங்கள் என்றும், அதிக நோபல் பரிசு பெற்ற நாடு எது தெரியுமா என்றும் கேட்கப்படும் பதிவுகளை ஓராண்டிற்கும் மேலாக, (நான் ஒரு வருடமாக வாட்ஸ்அப்பில் இருப்பதால் சொல்கிறேன்) பதிவு செய்யப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இதில் இருக்கின்ற உண்மைத் தன்மைக்கு யார் பொறுப்பு? கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் எழுதலாம், அதை பிறருக்கு ஃபார்வர்டு செய்து நம்ப வைக்கலாம் என்ற எண்ணம் சரியா? இதை தொடர்புடையவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பல தரப்பட்ட குழுக்களில் ஒருவர் இருப்பதால், ஏராளமான தகவல்கள் கிடைக்கப் பெறும். நல்ல விஷயங்கள் தெரியவரும். அதையெல்லாம், சான்றுக்கு மேற்கூறிய சில ஃபார்வர்டு பதிவுகளால் படிக்க முடியாமல் சோர்வுற்றுவிடுகிறார்கள். எனவே, வாட்ஸ்அப் பயனாளர்கள் இரண்டு விசயங்களை உள்வாங்கி கொள்ளுங்கள். ஒன்று, உங்களுக்கு கிடைக்கும் எந்த தகவலாக இருந்தாலும், அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொண்டு பிறருக்கு பரிந்துரை செய்யுங்கள். இல்லையென்றால் நீங்கள் மட்டுமே படித்து தெரிந்து கொள்ளுங்கள். இரண்டாவது, வரும் எல்லா தகவல்களையும் படித்தாயிற்று, வேண்டபட்டவர்களுக்கு ஃபார்வர்டு செய்துவிட்டாகிவிட்டது என்றால், அதை அழித்துவிடுங்கள். ஒருவேளை சில பதிவுகள் தேவைபடுகிறது என்றால் அதை மட்டும் வைத்து கொண்டு மீதமுள்ளவற்றை அழித்துவிடுங்கள். எதுவும் அளவுக்கு மீறாமல் இருப்பதே நலம். மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும். இது வாட்ஸ்அப்புக்கும் அப்படியே பொருந்தும்!
-பாலா, மயிலாடுதுறை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக