இந்த ஆண்டு (2011) முதல் ஜனவரி 25-ம் நாளை தேசிய வாக்காளர் தினமாகக் தேர்தல் ஆணையம் கொண்டாடுகிறது. ஆம், அன்றைய தினம் தான் இந்தியத் தேர்தல் ஆணையம் தொடங்கப்பட்டது. புதிய வாக்காளர் களைப் பட்டியலில் சேர்ப்பது, அடையாள அட்டை வழங்குவது எப்படி என்று அன்றைய தினத்தை தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்காக செலவிடும். சரி, யார் வாக்காளர்? பட்டியலில் பெயர் சேர்ப்பது எப்படி? அடையாள அட்டை பெறுவது எப்படி? இதோ... உங்களுக்காக...
18 வயது பூர்த்தியானவர்கள் அனைவரும் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். தேர்தலில் வாக்களிக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை. வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்த்துக் கொள்ள, தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பூத் வாரியாக, பூத் லெவல் ஆபீஸர்கள் இருக்கிறார்கள். அவர்களது முகவரி, தொலைபேசி எண் உட்பட அனைத்து விவரங்களும் பூத் வாரியாக தமிழகத் தேர்தல் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டங்களில் பெரும்பாலும் இவர்கள் தாலுகா அலுவலகங்களில் இருப்பார்கள். சென்னை போன்ற மாநகராட்சிகளில், மண்டல அலுவலங்களில் நேரடியா கவோ, தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளலாம். அவர்களே உங்களின் வீடு தேடி வந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப் பத்தையும் கொடுப்பார்கள்.
அவர்கள் தரும் ஃபார்ம்-6 என்ற விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து உங்களின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒட்ட வேண்டும். மேலும், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப் படங்கள், வசிப்பிடச் சான்றிதழ், 18 வயது பூர்த்தி ஆனதற்கான சான்றிதழ் ஆகியவற்றை இணைத்துத் தர வேண்டும். பிறகு, நீங்கள் கொடுத்த தகவல்கள் சரியாக இருக்கின்றனவா என விசாரித்த பின், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டு, அடையாள அட்டை வழங்கப்படும்.
அடையாள அட்டையில் பெயர், முகவரியில் எழுத்துப் பிழைகள், முகவரி மாற்றம் போன்றவை இருந்தால், அதற்கென்று தனியாக வேறு ஒரு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். முகவரி மாற்றித் தர 15 ரூபாய் கட்டணம். ஒருவரே இரு இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, இரண்டு அடையாள அட்டைகள் வாங்குவது, போலி முகவரி தருவது போன்ற தவறுகள் செய்தால், அது குற்றமாகக் கருதப்பட்டு, சிறை தண்டனைகூட விதிக்கப்படலாம்.
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக