செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

வியாழன், பிப்ரவரி 10, 2011

வாக்காளர் அடையாள அட்டை பெறுவது எப்படி?


இந்த ஆண்டு (2011) முதல் ஜனவரி 25-ம் நாளை தேசிய வாக்காளர் தினமாகக் தேர்தல் ஆணையம் கொண்டாடுகிறது. ஆம், அன்றைய தினம் தான் இந்தியத் தேர்தல் ஆணையம் தொடங்கப்பட்டது. புதிய வாக்காளர் களைப் பட்டியலில் சேர்ப்பது, அடையாள அட்டை வழங்குவது எப்படி என்று அன்றைய தினத்தை தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்காக செலவிடும். சரி, யார் வாக்காளர்? பட்டியலில் பெயர் சேர்ப்பது எப்படி? அடையாள அட்டை பெறுவது எப்படி? இதோ... உங்களுக்காக...

18 வயது பூர்த்தியானவர்கள் அனைவரும் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். தேர்தலில் வாக்களிக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை. வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்த்துக் கொள்ள, தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பூத் வாரியாக, பூத் லெவல் ஆபீஸர்கள் இருக்கிறார்கள். அவர்களது முகவரி, தொலைபேசி எண் உட்பட அனைத்து விவரங்களும் பூத் வாரியாக தமிழகத் தேர்தல் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டங்களில் பெரும்பாலும் இவர்கள் தாலுகா அலுவலகங்களில் இருப்பார்கள். சென்னை போன்ற மாநகராட்சிகளில், மண்டல அலுவலங்களில் நேரடியா கவோ, தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளலாம். அவர்களே உங்களின் வீடு தேடி வந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப் பத்தையும் கொடுப்பார்கள்.

அவர்கள் தரும் ஃபார்ம்-6 என்ற விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து உங்களின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒட்ட வேண்டும். மேலும், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப் படங்கள், வசிப்பிடச் சான்றிதழ், 18 வயது பூர்த்தி ஆனதற்கான சான்றிதழ் ஆகியவற்றை இணைத்துத் தர வேண்டும். பிறகு, நீங்கள் கொடுத்த தகவல்கள் சரியாக இருக்கின்றனவா என விசாரித்த பின், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டு, அடையாள அட்டை வழங்கப்படும்.

அடையாள அட்டையில் பெயர், முகவரியில் எழுத்துப் பிழைகள், முகவரி மாற்றம் போன்றவை இருந்தால், அதற்கென்று தனியாக வேறு ஒரு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். முகவரி மாற்றித் தர 15 ரூபாய் கட்டணம். ஒருவரே இரு இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, இரண்டு அடையாள அட்டைகள் வாங்குவது, போலி முகவரி தருவது போன்ற தவறுகள் செய்தால், அது குற்றமாகக் கருதப்பட்டு, சிறை தண்டனைகூட விதிக்கப்படலாம்.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக