செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

செவ்வாய், ஜனவரி 03, 2012

புதிய உலக அதியசங்கள்.!


முன்பு அறிவிக்கப்பட்ட ஏழு அதிசயங்கள் அனைத்தும் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்தவைகளாக இருந்தன. இந்த அதிசயங்களில் எகிப்தின் பிரமிடு மட்டுமே இப்போது உள்ளது. இந்த உலக அதிசயங்களை கிரேக்க எழுத்தாளர் ‘ஆன்டிபேட்டர்’ என்ற தனி நபர் ஒருவராகவே தேர்வு செய்ததாக நம்பப்படுகிறது. இந்நிலையில் இப்போதைய காலகட்டத்தின் அடிப் படையில் உலகின் புதிய 7 அதிசயங்களை தேர்வு செய்வதற்காக புதிய கருத்துக் கணிப்பு உலகம் தழுவிய அளவில் நடத்தப்பட்டது.

தாஜ்மகால்
இதற்கான முயற்சிகளை சுவிட்சர்லாந்து நாட்டை பூர்வீகமாக கொண்ட கனடா நாட்டவரான ‘பெர்னாட் வெப்பர்’ தொடங்கினார். யுனெஸ்கோ அமைப்பு இந்த வாக்கெடுப்புக்கு கண்டனம் தெரிவித்தது. உலக அதிசயங்களை ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுப்பது சரி அல்ல என்றும் கூறியது. ஆனாலும், உலகின் புதிய 7 அதிச யங்களை தேர்வு செய்வதற்காக உலக அளவில் இணையதளம் மூலமாகவும், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் வாக்கெடுப்பு நடந்தது. 

இயேசு நாதர் சிலை
உலகம் முழுவதிலும் இருந்து 10 கோடி பேர் இணையதளம் (www.new7wonders.com/en/) மூலம் ஆன்லைன் வாக்கெடுப்பில் கலந்துகொண்டு வாக்களித்தனர். இந்தியாவிலுள்ள தாஜ்மகால், மதுரை மீனாட்சி கோவில், குதுப்மினார் உள்பட பல கட்டடங்கள் இப்போட்டியில் இடம் பெற்றன. இவற்றில் தாஜ்மகால் உள்ளிட்ட இருபத்து நான்கு கட்டடங்கள் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டன. உலக அதிசயங்களை அறிவிக்கும் நிகழ்ச்சி போர்ச்சுகல் நாட்டின் தலைநகர் லிஸ்பனில் கடந்த ஆண்டு (18-01-2011) நடந்தது. அப்போது ஏழு அதிசயங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. அவை:

1. இந்தியாவின் தாஜ்மகால்
2. சீனப் பெருஞ்சுவர்
3. ஜோர்டானின் பெட்ரா
4. பிரேசிலின் ரியோ டிஜெனீரோ நகரில் 
        மலை உச்சியில் உள்ள பிரமாண்ட இயேசு நாதர் சிலை
5. பெரு நாட்டின் மச்சு பிச்சு
6. மெக்சிகோவின் மயன் கட்டடங்கள்
7. ரோம் நகரின் கொலேசியம்

நவீன ஏழு அதிசயங்களில் ஐரோப்பாவில் இருந்து இடம் பெற்றிருப்பது ரோம் நகரின் கொலேசியம் மட்டும்தான். இந்த ஏழு அதிசயங்கள் அறிவிக்கப்பட்டதும் பிரேசில், பெரு நாடுகளில் மக்கள் தங்கள் நாடுகளைச் சேர்ந்த அதிசயங்கள் அறிவிக்கப்பட்டதை ஆடிப்பாடி கொண்டாடினார்கள்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் ஜி.எஸ்.பாலமுருகன்.

1 கருத்து:

  1. இந்த உலக அதிசயங்கள் ஏழு வோட்டிங் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறது என்பதே மோசடி. யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்படும் பல நினைவுச்சின்னங்களும் அதிசயங்கள் என்பதுதான் உண்மை. இதுபோக இவர்கள் கண்களில் படாமல் நம் தேசத்தில் இருக்கும் பல கோவில்களும் நிச்சயம் அதிசயமே..

    மேலும் அதிசயம் என்பது அவரவர் பார்வைக்கேற்ப மாறுபடும். அதன்படியும் வேறுபடுத்தவேண்டும்..

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு