கென்யாவைச் சேர்ந்த வங்காரி மாத்தாய் 1977ல் கிரீன் பெல்ட் இயக்கத்தை நிறுவி அதன் மூலம் மரக்கன்று நடும் பணியை செய்து வந்தார். கென்யா முழுவதும் அவரது இயக்கம் இதுவரை சுமார் 5 கோடி மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்துள்ளது. கென்யாவில் எங்கெல்லாம் காடுகளுக்கு மனிதர்களால் அச்சுறுத்தல் இருந்ததோ அங்கெல்லாம் மாத்தாய் சென்று காடுகளை ஆபத்தில் இருந்து காப்பாற்றுவார். அவரது இந்தப் பணியால் கென்ய மக்கள் மட்டுமல்லாது உலக அளவிலான சுற்றுச்சூழல் ஆர்வலர்களும்,வன ஆர்வலர்களும் முன்மாதிரியாகவும் வங்காரி மாத்தாய் திகழ்ந்தார்.
WANGARI MAATHI |
காவல்துறையினர் தாக்குதல்:
கென்யாவில் உயர்ந்தக் கட்டடங்கள் கட்டப்படுவதை மாத்தாய் கடுமையாக எதிர்த்தார். அந்நாட்டின் அதிபராக டேனியல் அரேப் மோய் இருந்த போது காடுகள் அழிக்கப் படுவதையும், உயர்ந்தக் கட்டடங்கள் கட்டப்படுவதையும் எதிர்த்து மாத்தாய் தொடர் போராட்டங்களை நடத்தினார். அப்போதெல்லாம் மாத்தாய் காவல்துறையினரால் கடுமை யாகத் தாக்கப்பட்டார்.போரட்டத்தால் அவர் சந்தித்த இன்னல்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.
இருப்பினும் அவர் தனது சமூகப் பணியை தொடர்ந்து செய்து வந்தார். சுற்றுச்சூழல் அவசியத்தை வலியுறுத்தியதுடன் உலக அமைதியையும் மாத்தாய் தொடர்ந்து வலியுறுத்தினார். இவரது இந்த அர்ப்பணிப்பைப் பாராட்டும் விதத்தில் அமைதிக்கான நோபல் விருது 2004ல் வழங்கப் பட்டது. இதன் மூலம் இந்த உயரிய விருதைப் பெற்ற முதல் ஆப்பிரிக்கப் பெண்மணி என்ற பெருமையை பெற்றார்.
புற்றுநோயால் மறைவு:
இதனிடையே, 2002ல் கென்ய நாடாளுமன்றத்துக்கு எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2003 முதல் 2005 வரை சுற்றுச்சூழல் துணை அமைச்சராகப் பதவி வகித்தர். 1940 ஏப்ரல் 1 ஆம் தேதி பிறந்த மாத்தாய், புற்றுநோயால் அவதிப்பட்டு, 2011 செப்டம்பர் 25 ஆம் தேதி இந்த உலகை விட்டு பிரிந்தார்.
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக