செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

வியாழன், அக்டோபர் 13, 2011

நாணயத்தின் ஒரு பக்கம் ‘ஆர்.கே.நாராயண்’.!


ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் பிரபலமடைவது ஆபூர்வம். அந்த வகையில் ஆர்.கே.நாரயண்-ஆர்.கே.லஷ்மண் சகோதரர்கள், தங்கள் கற்பனைத் திறனால் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தவர்கள். முன்னவர், ஆங்கில நாவலாசிரியராகவும், பின்னவர், கேலிச்சித்திரங்கள் வரைவதிலும் புகழ் பெற்றனர்.

பெங்களூருவில் பிறந்த ஆர்.கே.நாயாண், தொடக்க கல்வியை சென்னையில் பயின்றார். பின்னர், மைசூர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். ஆங்கில மொழியில் எழுதும் இந்திய எழுத்தாளர் களில் இவர் குறிப்பிடத்தக்கவர், முதன்மையானவர். எளிமையான, நகைச்சுவை கலந்த இவரது படைப்புகள் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுத்தந்தன. இவர் எழுதிய, ‘Swami and Friends’, ‘Waiting for the Mahatma’, ‘Guide’, ‘Man-Eater of Malgudi’, ‘Mr.Sampath’, ‘Vendor of Sweets’, ‘Financial Expert’ ஆகிய நூல்கள் பலரையும் கவர்ந்தவை.

மேலும், இவரின் பல நாவல்கள் தமிழ், பிரெஞ்சு, சுவிடிஷ், இத்தாலி, ஜெர்மன், ரஷ்யன் ஆகியவற்றில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. மால்குடி என்னும் ஒரு கற்பனைக் கிராமப் பின்னணி யிலேயே இவரது பெரும்பான்மையான கதைகள் அமைந்தன.


‘தி இந்து’ நாளிதழில் இவரது பல குறுங்கதைகள் வெளியாகியுள்ளன. சென்னையிலிருந்து வெளிவந்த, ‘ஜஸ்டிஸ்’ என்ற பத்திரிகை க்கு சிலகாலம் மைசூர் பதிப்புக்கு ஆசிரியராகவும் பணியாற்றினார்.

இந்து புராணம் மற்றும் நாட்டுப்புறக் கதைகளை ஆங்கிலத்தில் பதிவு செய்த பெருமைக்குரியவர் ஆர்.கே.நாரயண். எழுத்திற்காகப் பல விருதினைப் பெற்றிருக்கும் இவரை, 1956ல் ராக்ஃபெல்லர் என்ற அமெரிக்க அமைப்பு, அங்கே வரவழைத்துப் பாராட்டிக் கொளரவித்தது. 2011ல் மறைந்த இவரைப் பற்றி இவரது சகோதரர் கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லஷ்மண், ‘தொழில் ரீதியான ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக நாங்கள் செயல்பட்டோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக