புதிய குடியரசுத்தலைவராக பதவியேற்றுள்ள பிரணாப்புக்கு மாத சம்பளமாக ஒன்றரை லட்சம் கிடைக்கும். பிரமாண்டமான ஜனாதிபதி மாளிகையில் அவர் வசிப்பார். ஜனாதிபதி மாளிகையை பராமரிக்க 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருக்கிறார்கள். சிம்லாவிலும், ஐதராபாத்திலும் குடியரசுத்தலைவருக்கு ஓய்வு இல்லங்கள் உள்ளன. அவர் பயணம் செய்ய குண்டு துளைக்காத மெர்சிடெஸ் பென்ஸ் கார் வழங்கப்பட்டுள்ளது.
குடியரசுத்தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும், மாத ஓய்வூதியமாக 75 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். குடியிருக்க அனைத்து வசதிகளுடன் கூடிய அவர் விரும்பும் நகரத்தில் ஒரு பங்களாவும் வழங்கப்படும். மேலும், ஒரு கார், 2 டெலிபோன் இணைப்புகள், ஒரு செல்போன் இணைப்பு ஆகியவையும் வழங்கப்படும். அவருக்கு உதவியாக ஒரு தனிச்செயலாளர் உள்பட ஐந்து ஊழியர்களும் நியமிக்கப்படுவார்கள். ஊழியர்கள் செலவுக்காக ஆண்டுக்கு 60 ஆயிரம் வழங்கப்படும்.விமானத்திலும்,ரெயிலிலும் மனைவியுடன் இலவசமாக பயணம் செய்யலாம்.
கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக