செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

சனி, நவம்பர் 19, 2011

எத்தனை ரகசியங்களோ சிதம்பரத்தில்...!



தோற்றம், அவதாரம், பிறப்பு போன்ற மாசு மலங்கள் இல்லாத தூய செம் பொருளாக இருப்பதால் பரமசிவம் ‘சித்து’ எனப்படுகிறது. ‘அம்பரம்’ என்றால் ‘ஆகாயம்’ என்று பொருள். எல்லாவற்றையும் கடந்து எல்லாமாக உள்ள பரிபூரண சித்து அம்பரமாக எழுந்தருளி இருக்கும் திருத்தலமே சிதம்பரம் (சித்து+அம்பரம்) என்று அழைக்கப்படுகிறது.

சிதம்பரம் நகருக்கு கோவில் நகர், நாட்டிய நகர் என்ற புனைப் பெயர்களும் உண்டு. திருச்சிற்றம்பலம் என்ற பெயர், சிற்றம்பலமாக மருவி சிதம்பரம் என்றானது என்றும் கூறுவர். சிதம்பரத்தில் உள்ள சிவ ஆலயம் உலகப் புகழ்பெற்றது. இது தில்லை மரங்கள் நிறைந்த காடாக முற்காலத்தில் இருந்ததால், ‘தில்லை’ என்றும் ‘தில்லையம்பலம்’ என்றும் அழைக்கப்பட்டது. நாயன்மார்கள் பாடிய தேவாரத்தில் சிதம்பரம் பற்றி கூறப்பட்டுள்ளதாலும், நாயன்மார்கள் நால்வரும் இங்கு வந்து பாடியதாலும் இது ‘பாடல் பெற்ற தலம்’ என்றும் அழைக்கப்படுகின்றது.

சைவர்களின் முக்கிய கடவுளான சிவபெருமான், நடராஜர் என்ற பெயரில் வீற்றிருக்கும் ஆலயமும், வைணவர்களின் முக்கிய கடவுளான திருமால், கோவிந்தராசப் பெருமாள், புண்டரீகவல்லித் தாயாருடன் வீற்றிருக்கும் ஆலயமும் சிதம்பரம் நகரில் அமைந்துள்ளது, அந்நகரத்திற்கு மேலும் பெருமை சேர்க்கிறது. பிற கோவில்களில் லிங்க வடிவில் இருக்கும் சிவ பெருமான், சிதம்பரம் கோவிலில் மட்டும் நடனமாடும் நிலையில் நடராஜராக காட்சித் தருகிறார். நடனமாடும் நிலையில் இருப்பதால், பரதநாட்டியம் என்னும் நாட்டியக் கலைக்கு முதற்கடவுளாக இந்த நடராஜரை வணங்குகின்றனர்.


40 ஏக்கர் பரப்பளவில், நான்கு திசைக்கு ஒரு கோபுரம் என நான்கு கோபுரங்களும், ஐந்து சபைகளும் உடையது சிதம்பரம் ஆலயம். இந்த ஆலயத்தில் உள்ள கிழக்கு கோபுரத்தில் 108 பரதநாட்டிய நிலைகளில் உள்ள சிற்பங்களை காணலாம். இங்கு மூலவர் சிலை இருக்கும் இடம் கனகசபை என்று அழைக்கப்படுகிறது. இந்த சபை, பராந்தக சோழ மன்னனால் பொற் கூரை வேயப்பட்டு கனகசபை என்ற பெயர் பெற்றதாகும்.

பஞ்சபூதங்களில் ஒன்றான ஆகாயம் வடிவில் சிவபெருமான் இக்கோவிலில் இருக்கிறார் என்பதை குறிப்பால் உணர்த்தும் வகையில் ‘சிதம்பர ரகசியம்’ அமைக்கப்பட்டுள்ளது. ரத்தினக்கல்லால் செய்யப்பட்ட நடராஜர் விக்கிரகமும், ஆதிசங்கரர் அளித்த ஸ்படிக லிங்கமும், சிதம்பர ஆலயத்தில் இன்றும் அவற்றிற்கு பூஜை செய்யப்படுகிறது. வைணவக் கடவுளான திருமால் இங்கு திருச்சித்திரக் கூடம் என்ற சபையில், நடராஜரின் கனகசபைக்கு அருகில் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் திருச் சித்திரக்கூடம் பற்றிய குறிப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கோவிலில் சிவகாமி அம்மனும் அருள் பாலித்து வருகிறார் என்பதும் சிறப்பு. இங்கு ஆயிரம் தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், சிற்பக் கலைக்கும்- கட்டிடக் கலைக்கும் சிறப்பு பெற்றது.

நடராஜர் ஆலயமும், தில்லையம்மன் ஆலயமும், இளமையாக்கினார் ஆலயமும், திருச்சித்திரக்கூடமும் இங்கு இருப்பதால், இது ‘ கோவில் நகரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. நடனக்கலைகளின் தந்தையான சிவ பெருமானின் நடனமாடும் தோற்றம் நடராஜராஜன் எனப்படுகிறது. இதுவே மருவி நடராஜர் என அழைக்கப்படுகிறது. சிவபெருமானின் பல வகையான நடனங்களில் இத்தலத்தில் அவரது ‘ஆனந்த தாண்டவம்’ இடம் பெற்றுள்ளது.

இந்த கோவிலில் நாட்டியாஞ்சலி என்ற நாட்டிய விழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உலகில் பல்வேறு இடங்களில் நாட்டியம் பயிலும் கலைஞர்கள், தங்களுடைய நாட்டியத்தை இங்கு அர்ப்பணிக்கின்ற னர். அவர்கள் இங்கு வந்து நாட்டியார்ப்பணம் செய்வதை மிகப்பெரிய பாக்கியமாகவே கருதுகின்றனர்.

பக்தி இலக்கியத்திலும், சங்க இலக்கியத்திலும் தில்லை சிவபெருமான் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. சோழ மன்னர்கள் பலர், இந்த ஆலயத்திற்கு திருப்பணி செய்துள்ளனர். சோழர்களுக்குப் பிறகு பாண்டிய மன்னர்களும், கிருஷ்ண தேவராயரும் இங்கு வழிப்பட்டதாகவும், திருப்பணிகள் பல புரிந்ததாகவும் இக்கோவில் கல்வெட்டுகளில் ஆதாரங்கள் காணப்படு கின்றன.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக