செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

செவ்வாய், நவம்பர் 22, 2011

எப்படி உள்ளது கூடங்குளம்?


கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்க, 1988ல் இந்திய பிரதமர் ராஜிவ் மற்றும் ரஷ்ய அதிபர் கோர்பசேவ் ஆகியோர் கூட்டு ஒப்பந்தம் செய்து கொண்டனர். பல்வேறு தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொண்டு, வி.வி.இ.ஆர்.-1000 என்ற தொழில் நுட்பத்துடன் பணிகள் தொடங்கப்பட்டன. இந்திய அணுமின் கழகத்தின் 13 ஆயிரத்து 171கோடி மதிப்பில் திட்டங்கள் தொடங்கின.

இரண்டு யூனிட்களில், தலா 1000மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது. மேலும், 3, 4 ,5, 6 என தலா ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி திறனுள்ள நான்கு அணு உலைகள் அமைக்கப்பட உள்ளன. கடந்த 2001ல் அணு நிலைய கட்டுமான பணிகள் தொடங்கி 2007ல் முடிந்தன.


பின்னர், தொழில்நுட்ப ரீதியான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு 2007ல் கொதிகலன் நிறுவப் பட்டது. அணுமின் உற்பத்திக்கான கருவிகள் 2008ல் நிறுவப்பட்டு, எலக்ட்ரானிக் கட்டுப்பாட்டு நடுவங்கள் அமைக்கப்பட்டன. தற்போது, கட்டுமான பணிகள், கருவிகள் பொருத்துதல் என அனைத்தும் முடிந்து, முதல் யூனிட்டில் மின் உற்பத்தி செய்வதற்கான ஒத்திகை பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த மாதம் முதல் ஒரு யூனிட்டிலும், அடுத்த ஆண்டில் இரண்டாம் யூனிட்டிலும் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கூடங்குளம் அணு மின்நிலையம் நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான ஒன்றாக கருதப்படுகிறது. ஒரே நேரத்தில், எந்த சுற்றுச் சூழல் சீர்கேடும் இல்லாமல் 2000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய உகந்த திட்டம் என கூறப்படுகிறது. கூடங்குளம் அணு மின் நிலையத்தால் மக்களுக்கோ, சுற்றுப்புறத்திற்கோ எந்த ஆபத்தும் இல்லை என அணுமின் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணுமின்நிலையத்தின் இயல்புநிலை குளிர்விப்பான் 40 மீட்டர் உயரத்தில் வடிவமைக்கப் பட்டுள்ளது.


மேலும், நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரழிவுகளை தாங்கக்கூடிய வகையில் கடல் மட்டத்திலிருந்து ஏழரை மீட்டர் உயரத்தில் அணுமின்நிலைய கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. அணுமின் நிலைய வளாகத்தின் ஒரு புறம் கடல் பகுதியை ஒட்டி வருவதால், பாதுகாப்பு காரணங்க ளுக்காக 500 மீட்டர் வரை மீன் பிடிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கதிர்வீச்சு பாதிப்பு குறித்து ஆராய, பாப அணுமின் நிலைய சுற்றுச்சூழல் ஆய்வகம் ஒன்று கூடங்குளம் ஏரியாவில் 2004 முதல் செயல்பட்டு வருகிறது.

இருபது ஆண்டுகளாக கட்டப்பட்ட கூடங்குளம் அணுமின் நிலையம், வெற்றிகரமாக உற்பத்தியை தொடங்கவுள்ள நிலையில் திடீர் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து நடுவண் அரசு என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக