செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

செவ்வாய், நவம்பர் 15, 2011

பத்திரிகைகள் கண்களை திறந்து விட்டவர்.!


இலக்கியம், பத்திரிகை, நாடகம், சினிமா முதலிய துறைகளில் சிறப்பும், திறமையும் மிக்கவர்களுக்கு அமெரிக்காவில் ஆண்டுதோறும் ‘புலிட்சர் விருது’ வழங்கி சிறப்பு செய்யப்படுகிறது. ஜோசப் புலிட்சர் எனும் சாமானியர் பின்னாளில் பத்திரிகை உலகில் பல சாதனைகளை நிகழ்த்தியவர். புலிட்சரின் வாழ்க்கை சுவாரஸ்யமும், திருப்பங்களும் நிறைந்தது.

ஜோசப் புலிட்சர்
1864ல் லண்டனுக்கு வந்த ஹங்கேரிய இளைஞரான ஜோசப் புலிட்சருக்கு அப்போது வயது 17. பிரிட்டிஷ் ராணுவத்தில் சேருவதுதான் அவர் கனவு. ஆனால், உடற்கட்டும் இல்லை, கண்பார்வையில் குறைபாடு வேறு. முதலில் நிராகரிக்கப்பட்டாலும், பின்னர் அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருந்த யூனியன் படைகளுக்கு ஆள் திரட்டிய ஏஜென்டின் சிபாரிசால் ராணுவத்தில் சேர்ந்தார்.

அமெரிக்காவில் சிறிது காலம் ராணுவச் சேவையில் ஈடுபட்டபின், செயிண்ட் லூயிக்கு சென்றார். சின்ன சின்ன தொழில்களை செய்து பிழைத்து வந்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் ஜெர்மனிய பத்திரிகை ஒன்றில் நிருபராக சேர்ந்தார். நாலே ஆண்டுகளில் அதாவது அவரது 24ஆவது வயதில் அந்த பத்திரிகையின் உரிமையாளர் களில் ஒருவராகவே ஆனார். அதுமட்டுமா...? நஷ்டத்தில் நிறுத்தப்படும் சூழலில் இருந்த வேறொரு பத்திரிகையைக் குறைந்த விலைக்கு வாங்கினார். அதை தரகர் ஒருவர் மூலம் மற்றொருவருக்கு கைமாற்றினார். இதன் மூலம் 7,000 பவுண்டுகளைச் சம்பாதித்தார்.

இதுமட்டுமா...? பின்னர் புலிட்சர் தொட்டதெல்லாம் பொன்னாயிற்று. ஆங்கில மொழி, சட்டம், அரசியல் ஆகியவற்றில் வல்லுநரானார். சரியாக நடத்தப்படாமல் இருந்த மேலும் 2 ஆங்கில நாளிதழ்களை விலைக்கு வாங்கினார். இரண்டையும் ஒன்றாக இணைத்து ‘செயிண்ட் லூயி போஸ்ட் டெஸ்பாட்ச்’ என்ற பத்திரிகையை உருவாக்கினார். அரசியல் வாதிகளின் முகத்திரைகளையும் அரசாங்கத்தின் திரைமறைவு நிகழ்வுகளையும் போர்க் கொடூரங்களையும் தைரியமாக தோலுரித்துக் காட்டினார்.

1972ல் நடந்த வியட்நாம் - அமெரிக்க போரின் கோர காட்சி. புலிட்சர் விருதைப் பெற்ற புகைப்படம் இது.
‘இன்றைக்கு நம்மைப் பற்றி என்ன எழுதியிருக்கின்றனர்’ என்று அதிகாலையிலேயே பயத்துடன் இவரது பத்திரிகையை படித்த அரசியல்வாதிகள்தான் அதிகம். சக்தி மிக்க செய்தி பத்திரிகை என்ற அங்கீகாரம் வாசகர்களிடம் இருந்து இந்த பத்திரிகைக்கு கிடைத்தது. நாளடைவில் தனது ‘நியூயார்க் வேர்ல்ட்’ என்ற பத்திரிகையின் மூலம் அரசியலில் புலிட்சர் தனி செல்வாக்குப்பெற்றது தனிக்கதை.

40 வயதில் அமெரிக்காவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவராவோம் என அவர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். ஆனால், பல பத்திரிகைகளின் கண்களை திறந்து விட்ட புலிட்சர் தன் கண்பார்வை முழுவதும் இழந்தார். பார்வையை இழந்தாலும் சிறந்த அறிவாளிகளின் துணை கொண்டு மேலும் சிறப்படைந்தார்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக