செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

சனி, மே 19, 2012

வறண்டு வரும் பெட்ரோல் கிணறுகள்.!



பெட்ரோல் இன்னும் எத்தனை நாட்களுக்கு? நடுங்கியபடி உலகம் தன்னைத் தானே கேட்டுவரும் தினசரி கேள்விகளில் ஒன்றுதான் இது. வானளாவ உயர்ந்து வரும் விலை, அதிகரித்து வரும் உபயோகம் - இவற்றுக்கு இடையே இந்த கேள்வி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. உலகம் முழுவதும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எண்ணை வளத்தையும், அதன் சராசரி உற்பத்தியையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இன்னும் 40 வருடங்களுக்கே எண்ணை கிடைக்கும் என்று ஒரு கணக்கீடு சொல்கிறது.


உலகம் எங்கும் சுமார் 1.24 லட்சம் கோடி பீப்பாய் எண்ணை இருப்பு உள்ளது. இதில் சவுதி அரேபியா 21.3 சதவீதமும், ஈரான் 11.2 சதவீதமும் இருப்பு வைத்துள்ளன. பெட்ரோல் உற்பத்தியில் சவுதி அரேபியாவே முன்னணியில் உள்ளது. ஒரு காலத்தில் ரஷ்யாவே அதிகமாக எண்ணையை உற்பத்தி செய்து கொண்டு இருந்தது. ஆனாலும் ஏற்றுமதியில் சவுதியே முன்னணியில் இருந்தது - இருக்கிறது. ரஷ்யாவில் எடுக்கப்படும் எண்ணையில் பாதிக்கு மேல் அந்த நாட்டிலேயே செலவாகி விடுகிறது.

ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் உற்பத்தியாகும் மொத்த பெட்ரோலில் கால் பங்கு (25 சதவீதம்) அமெரிக்காவே பயன்படுத்துகிறது. அதற்கடுத்து சீனா (9.3 சதவீதம்), ஜப்பான் (5.8 சதவீதம்), இந்தியா (3.3 சதவீதம்), ரஷ்யா (3.2 சதவீதம்), ஜெர்மனி (2.8 சதவீதம்), தென்கொரியா (2.7 சதவீதம்), கனடா (2.6 சதவீதம்), சவுதி அரேபியா (2.5 சதவீதம்), பிரேசில் (2.4 சதவீதம்) என்ற கணக்கில் பெட்ரோலை பயன்படுத்துகின்றன.


எண்ணை உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடு சவுதி அரேபியா. இங்கு தினமும் 12 சதவீதம் உற்பத்தி செய்யப்படுகிறது. ரஷ்யா 12.6 சதவீதம், அமெரிக்கா 8 சதவீதம், ஈரான் 5.4 சதவீதம், சீனா 4.8 சதவீதம், மெக்சிகோ 4.4 சதவீதம், கனடா 4.1 சதவீதம், ஐக்கிய அரபு குடியரசு 3.5 சதவீதம், வெனிசுலா 3.4 சதவீதம், குவைத் 3.3 சதவீதம் என்ற அளவில் தினசரி உற்பத்தியாகிறது.

எண்ணை இருப்பு அதிகம் உள்ள நாடுகளில் இன்னும் எத்தனை ஆண்டுகள் எண்ணை வளம் இருக்கும் என்பதையும் ஆய்வு செய்து கூறியுள்ளனர். அதன்படி சவுதி அரேபியாவில் 69.5 ஆண்டுகள் வரை எண்ணை பூமியில் இருந்து எடுக்கலாம். அதேபோல் ஈரான் 86.2 ஆண்டுகள், ஈராக் 100 ஆண்டுகள், குவைத் 115 ஆண்டுகள், ஐக்கிய அரபு குடியரசு 91 ஆண்டுகள், வெனிசுலா 91.3 ஆண்டுகள், கஜகஸ்தான் 73.3 ஆண்டுகள், நைஜீரியா 41.1 ஆண்டுகள் எண்ணை வளம் கொண்டு இருக்கும். ஏற்கனவே உள்ள எண்ணைக் கிணறுகள் வறண்டு வரும், அதேவேளையில் புதிய புதிய எண்ணைக் கிணறுகள் கண்டுபிடிக்கப் பட்டு வருவது ஆறுதல் தரும் செய்தியாகும்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் மக்கள் பாலா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக