பெட்ரோல் இன்னும் எத்தனை நாட்களுக்கு? நடுங்கியபடி உலகம் தன்னைத் தானே கேட்டுவரும் தினசரி கேள்விகளில் ஒன்றுதான் இது. வானளாவ உயர்ந்து வரும் விலை, அதிகரித்து வரும் உபயோகம் - இவற்றுக்கு இடையே இந்த கேள்வி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. உலகம் முழுவதும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எண்ணை வளத்தையும், அதன் சராசரி உற்பத்தியையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இன்னும் 40 வருடங்களுக்கே எண்ணை கிடைக்கும் என்று ஒரு கணக்கீடு சொல்கிறது.
உலகம் எங்கும் சுமார் 1.24 லட்சம் கோடி பீப்பாய் எண்ணை இருப்பு உள்ளது. இதில் சவுதி அரேபியா 21.3 சதவீதமும், ஈரான் 11.2 சதவீதமும் இருப்பு வைத்துள்ளன. பெட்ரோல் உற்பத்தியில் சவுதி அரேபியாவே முன்னணியில் உள்ளது. ஒரு காலத்தில் ரஷ்யாவே அதிகமாக எண்ணையை உற்பத்தி செய்து கொண்டு இருந்தது. ஆனாலும் ஏற்றுமதியில் சவுதியே முன்னணியில் இருந்தது - இருக்கிறது. ரஷ்யாவில் எடுக்கப்படும் எண்ணையில் பாதிக்கு மேல் அந்த நாட்டிலேயே செலவாகி விடுகிறது.
ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் உற்பத்தியாகும் மொத்த பெட்ரோலில் கால் பங்கு (25 சதவீதம்) அமெரிக்காவே பயன்படுத்துகிறது. அதற்கடுத்து சீனா (9.3 சதவீதம்), ஜப்பான் (5.8 சதவீதம்), இந்தியா (3.3 சதவீதம்), ரஷ்யா (3.2 சதவீதம்), ஜெர்மனி (2.8 சதவீதம்), தென்கொரியா (2.7 சதவீதம்), கனடா (2.6 சதவீதம்), சவுதி அரேபியா (2.5 சதவீதம்), பிரேசில் (2.4 சதவீதம்) என்ற கணக்கில் பெட்ரோலை பயன்படுத்துகின்றன.
எண்ணை உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடு சவுதி அரேபியா. இங்கு தினமும் 12 சதவீதம் உற்பத்தி செய்யப்படுகிறது. ரஷ்யா 12.6 சதவீதம், அமெரிக்கா 8 சதவீதம், ஈரான் 5.4 சதவீதம், சீனா 4.8 சதவீதம், மெக்சிகோ 4.4 சதவீதம், கனடா 4.1 சதவீதம், ஐக்கிய அரபு குடியரசு 3.5 சதவீதம், வெனிசுலா 3.4 சதவீதம், குவைத் 3.3 சதவீதம் என்ற அளவில் தினசரி உற்பத்தியாகிறது.
எண்ணை இருப்பு அதிகம் உள்ள நாடுகளில் இன்னும் எத்தனை ஆண்டுகள் எண்ணை வளம் இருக்கும் என்பதையும் ஆய்வு செய்து கூறியுள்ளனர். அதன்படி சவுதி அரேபியாவில் 69.5 ஆண்டுகள் வரை எண்ணை பூமியில் இருந்து எடுக்கலாம். அதேபோல் ஈரான் 86.2 ஆண்டுகள், ஈராக் 100 ஆண்டுகள், குவைத் 115 ஆண்டுகள், ஐக்கிய அரபு குடியரசு 91 ஆண்டுகள், வெனிசுலா 91.3 ஆண்டுகள், கஜகஸ்தான் 73.3 ஆண்டுகள், நைஜீரியா 41.1 ஆண்டுகள் எண்ணை வளம் கொண்டு இருக்கும். ஏற்கனவே உள்ள எண்ணைக் கிணறுகள் வறண்டு வரும், அதேவேளையில் புதிய புதிய எண்ணைக் கிணறுகள் கண்டுபிடிக்கப் பட்டு வருவது ஆறுதல் தரும் செய்தியாகும்.
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் மக்கள் பாலா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக