செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

ஞாயிறு, மே 27, 2012

கொஞ்சம் பொறுமை வேணும்யா.!


சார்லஸ் டார்வின் (1809-1882) ஒரு ஆங்கில இயற்கை விஞ்ஞானி. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தவர். உயிரின உலகின் பரிணாம வளர்ச்சி பற்றி அதன் வரலாற்று ரீதியான வளர்ச்சி பற்றிய தத்துவத்தைக் கண்டுபிடித்தார். இன்றைய உயிரியல் கண்டுபிடிப்புகளுக்கான அடிப்படைத் தத்துவமே டார்வினியமாகும். சிறு வயதிலேயே மிகவும் பொறுமையானவராக சார்லஸ் டார்வின் இருந்தார்.


வயது முதிர்ந்த பிறகும் இந்தக் குணம் அவரிடம் அப்படியே இருந்தது. டார்வினின் கொள்கைகளைத் தாக்கி நாளும் பல கடிதங்கள் வரும். பத்திரிகைகளில் பல கேலிச் சித்திரங்களும் வெளிவந்தன. ஒரு சமயம் குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்ற அவருடைய சித்தாந்தத்தைத் தாக்கி பத்திரிகை ஒன்றில் கேலிச்சித்திரம் வெளியானது. அதில் குரங்கின் உடலும் டார்வினின் தலையும் கொண்ட உருவம் வரையப்பட்டிருந்தது.


ஒரு நண்பர், அதை எடுத்து வந்து டார்வினிடம் காட்டினார். டார்வின் அதைப் பார்த்து சிரித்துவிட்டு, “தலை நன்றாக வரையப்பட்டிருக்கிறது. ஆனால் உடல்தான் சரியில்லை.! மார்பு அகலமாக உள்ளது. உண்மையில் அப்படி இருக்காது.!” என்று நிதானமாக கூறினார். தன்னைத் தாக்குபவர்கள் மீதுகூட சார்லஸ் டார்வின் கோபம் கொண்டது கிடையாது.! ஆனால், நம் அரசியல் தலைவர்கள் அப்படியா? கொஞ்சம் பொறுமை வேணும்யா...!

கருத்துரை: சி.ஹேமகாவியா, 10 ஆம் வகுப்பு, இமாகுலேட் பள்ளி, புதுச்சேரி.
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக