ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம்.
ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் ஒவ்வொரு நாள் இருப்பது போல, ஏப்ரல் முதல் நாள் முட்டாள்கள் தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஒருவரை ஒருவர் எந்த விதத்திலாவது ஏமாற்றுவதில் குறியாக இருப்பார்கள். அவர்கள் கூறும் தகவல்களை உண்மை என்று நாம் நம்பி விடுவோம். ஆனால், அவை உண்மையல்ல என்று பின்னால் தெரியவரும் போது முட்டாள்களாகி விடுகிறோம்.
அப்போதுதான் தோன்றும்... ஓ... இன்றைக்கு ஏப்ரல் 1-ம் தேதியல்லவா? நம்மை முட்டாளாக்கவிட்டார்களே என்று எண்ணத் தோன்றும். மனதுக்குள் ஒரு புன்சிரிப்பு தோன்றி மறையும். இந்த முட்டாள்கள் தினம் ஏற்பட்டது குறித்து பார்ப்போம்.,
முட்டாள்களுக்காக ஒரு தினத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற யோசனையை முதன் முதலில் வெளியிட்டவர் ‘பாஸ்வெல்’ என்பவர் ஆவார். சூரிய வழிபாட்டிற்கும் இந்த விழாக் கொண்டாட்டத்துக்கும் தொடர்பிருப்பதாக பழைய நூல்களிலிருந்து தெரிய வருகிறது. ஆதிகுடிகளான ‘ஷெல்ட்’ இன மக்கள், சூரிய கடவுகளைக் குறித்து இதை வசந்த விழாவாகக் கொண்டாடினர். இவ்விழாவின் முக்கிய அம்சம் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து மகிழ்வதாகும்.
இப்படி முட்டாளாக்கப்படுபவர்கள் பிரான்சில் ‘ஏப்ரல் ஃபிஷ்’ என்று அழைக்கப்படு கிறார்கள். ஏனென்றால் அன்று காகிதத்தால் செய்த மீன் வடிவம் ஒன்றை ஒருவரின் முதுகில் அவருக்கு தெரியாமல் ஒட்டிவைத்து விட்டு, ஏப்ரல் ஃபிஷ் என்று கூவிக்கூவி அழைப்பார்கள். முதலில் ஏப்ரல் முதல் நாள் முழுவதும் இந்த விழா கொண்டாடப் பட்டது. மாலை வரை அவர்களை முட்டளாக்கிக் கொண்டிருந்தனர். பின்னர் நண்பகல் வரைதான் இந்த வேடிக்கைகளைச் செய்யலாம் என்று முடிவுக்கு வந்தனர். அதன் பிறகு முட்டளாக்க முயல்பவர்கள் முட்டாள்களாக கருதப்பட்டனர்.
இப்படியொரு பழக்கம் கனடா, இங்கிலாந்து, சைப்ரஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இன்றும் தொடர்கிறது.கிழக்கு நாடுகளில் இந்த முட்டாள்கள் தினம் கொண்டாட்டம் வழக்கத்தில் இல்லை. ஆனால், மேலை நாடுகளைப் பார்த்து நாமும் இப்போது இத்தினத்தைக் கொண்டாடு கிறோம். ஏப்ரல் முதல் நாளை அரசாங்க விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று பல நாடுகளில் விவாதங்கள் நடைபெற்றன.முடிவில் விடுமுறை தேவையில்லை என்று முடிவு செய்யப் பட்டது.
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக