செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

சனி, ஏப்ரல் 28, 2012

பங்காருவுக்கு நான்கு ஆண்டு ஜெயில்.!


ஆந்திர பா.ஜ.க.வின் அசைக்க முடியாத சக்தியாக பங்காரு லஷ்மண் விளங்கினார். மத்தியில் பா.ஜ.க.வின் வாஜ்பாய் பிரதமாரக இருந்த போது தலித் தலைவரான இவரை கட்சியின் தேசிய தலைமை பொறுப்பை கொடுத்து அழகு பார்த்தது. ஒரு தலித்தை தலைவராக்கி பார்த்ததுடன் கட்சிக்கு ஒரு புதிய முகத்தை அளிக்க பா.ஜ.க. விரும்பியது. ஆனால் இந்த முயற்சி சறுக்கலை தந்தது.

பாரதிய ஜனதா கட்சித் தலைவராக 2001ஆம் ஆண்டு பங்காரு லஷ்மண் பதவி வகித்தார். அப்போது தெஹல்கா.காம் பத்திரிகையைச் சேர்ந்த ஊடகவியலாளர், இங்கிலாந்தைச் சேர்ந்த ‘வெஸ்ட் எண்ட் இன்டர்நேஷனல்’ என்ற ஆயுத கம்பெனி பிரதிநிதி போல பங்காரு லஷ்மணைச் சந்தித்தனர்.


இந்திய ராணுவத்திற்கு தெர்மல் இமேஜர்ஸ் எனப்படும் நவீன கருவி சப்ளை செய்யும் காண்ட்ராக்டை பெற்றுத்தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டதோடு, அதற்கு பல லட்சம் ரூபாய் லஞ்சம் தருவதற்கான பேரத்தை அவர் நடத்தினார். அதற்கு பங்காரு லஷ்மண் ஒப்புக்கொண்டதும், முன்பணமாக ஒரு லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுக்கப்பட்டது.

அதனை பங்காரு பெற்றுக்கொண்ட போது, அந்நிருபர் தனது ரகசிய கேமராவில் அதை அப்படியே வீடியோவாகவும் படம் பிடித்தனர். லஞ்சத் தொகையை பெறும் போது, அதனை கட்சியின் நிதிக்காகத்தான் தாம் பெறுவதாக பங்காரு லஷ்மண்  கூறியிருந்தார். ஆனால் ராணுவ அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்வதற்கான லஞ்சமே இது என்பது பின்னர் தெரியவந்தது.

அவரது அமைச்சக அலுவலகத்தில் வைத்து, லஷ்மண் லஞ்சம் பெற்ற காட்சிகளை 2001 மார்ச் 13-ம் தேதி தெஹல்கா செய்தி நிறுவனம் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் ஹெகல்கா கொடுத்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை பங்காரு லஷ்மண் வாங்கும் காட்சியும் இடம் பெற்றிருந்தது. இவர் பணம் வாங்கும் காட்சி வெளியான சில மணி நேரங்களிலேயே பங்காருவின் அத்தனை புகழும் சரிந்து போனது.


நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த தெஹல்கா ஊழல் வழக்கில் பா.ஜ.க. தலைவர் பதவியை பங்காரு லஷ்மண் இழக்க நேரிட்டது. மேலும் அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

11 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், பங்காரு லஷ்மண் குற்றவாளி என டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் 27/04/12 அன்று தீர்ப்பளித்தது. அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி கான்வல் ஜீத் தீர்ப்பளித்தார். இதையடுத்து அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப் பட்டார். இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள காங்கிரஸ், பா.ஜ.க.விற்கு இது ஒரு பாடமாக அமையும் என்று கருத்து தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் பா.ஜ.க.வும் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பினை வரவேற்றுள்ளது.


ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பங்காரு லட்சுமண் கைது செய்யப் பட்டிருப்பதால், அவருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என்று தெரிகிறது. தற்போது, 72 வயதாகும் பங்காரு லஷ்மண் தேசிய செயற்குழுவில் உறுப்பினராகவும், பா.ஜ.க.வின் தலித் அங்கமான எஸ்.சி.மோர்ச்சாவின் உயர்மட்டக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக