செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

புதன், மார்ச் 21, 2012

“...விடாமல் நன்மை செய்.!”



நீ மற்றவரிடம் காட்டும் அன்பு உன் பலவீனமாகப் பார்க்கப்படலாம். ஆனாலும் அன்பாக இரு. நீ அடுத்தவருக்காகச் செய்யும் உதவி அறியப்படாமல் போய்விடலாம். ஆனாலும் உதவி செய். நீ வெற்றி பெற்றால் பொய்யான நண்பர்களையும் உண்மை யான எதிரிகளையும் அடைய நேரிடலாம். ஆனாலும் வெற்றி பெறுவதில் உறுதியாக இரு. நாணயமும், யதார்த்த நடை முறையும் உன்னை மென்மையானவனாக மாற்றி விடலாம். ஆனாலும் நாணயமாகவும் யதார்த்தமாகவும் நட.


நீ இன்று செய்யும் நன்மை நாளை மறக்கப்படலாம். ஆனாலும் விடாமல் நன்மை செய். நீ கடவுளிடம் நம்பிக்கையும், மாந்தரிடம் அன்பும் பூண்டிருப்பது காலத்துக்கு ஒவ்வாததாகக் கருதப்படலாம். ஆனாலும் அவற்றைக் கைவிட்டு விடாதே. வாழ்வின் பூரணமான அர்த்தம் நல்லொழுக்கமும் நன்மதிப்பும்தான். இவற்றை நீ பின்பற்றுவதால் மதிக்கப்படாமல் போகலாம். ஆனாலும் இறுதி நாள் வரை நல்லவனாகவே இரு - தேசத்தந்தை மகாத்மாக காந்தியடிகள்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக