சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்த கருப்பசாமி உயிரிழந்ததையடுத்து, அத்தொகுதிக்கு மார்ச் 18-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில், அ.தி.மு.க., தி.மு.க., ஏழு அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் உள்ளிட்ட 13 பேர் போட்டியிட்டனர். இதில், 78 விழுக்காடு வாக்குகள் பதிவானது. இதன் வாக்கு எண்ணிக்கை 21-ம் தேதி நடைபெற்று முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட்டன. இதில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முத்துச்செல்வி, 94,977 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
Muthuselvi mla |
68,757 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க.வின் ஜவகர் சூரிய குமாரை தோற்கடித்த முத்துச்செல்வி மார்ச் 22 அன்று சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். இதன் மூலம், சட்டப்பேரவையில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது. இந்த வெற்றி மூலம் அ.தி.மு.க.வை எதிர்த்துப் போட்டியிட்ட 12 பேரும் டெபாசிட் தொகையை இழந்தனர்.
இடைத்தேர்தல் வெற்றியின் மூலமாக பேரவையில் 150 இடங்களை அ.தி.மு.க. பெற்றுள்ளது. கட்சி வாரியாக பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை: அ.தி.மு.க. = 150, தே.மு.தி.க. = 29, தி.மு.க. = 23, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் = 10, இந்திய கம்யூனிஸ்ட் = 9, காங்கிரஸ் = 5, பா.ம.க. = 3, மனித நேய மக்கள் கட்சி = 2, புதிய தமிழகம் = 2, அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் = 1, நியமன உறுப்பினர் = 1.
குறிப்பு: 2 இடங்களில் வெற்றி பெற்ற சமத்துவ மக்கள் கட்சியும், ஒரு எம்.எல்.ஏ.வை வென்றுள்ள இந்திய குடியரசுக் கட்சியும் அ.தி.மு.க.சின்னத்திலேயே போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அம்மூவரும் அவையில் அ.தி.மு.க.உறுப்பினர்களாக கருதப் படுகின்றனர்.
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக