செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

வெள்ளி, மார்ச் 23, 2012

ஒன்றரை சதம் அடித்த அ.தி.மு.க.!


சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்த கருப்பசாமி உயிரிழந்ததையடுத்து, அத்தொகுதிக்கு மார்ச் 18-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில், அ.தி.மு.க., தி.மு.க., ஏழு அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் உள்ளிட்ட 13 பேர் போட்டியிட்டனர். இதில், 78 விழுக்காடு வாக்குகள் பதிவானது. இதன் வாக்கு எண்ணிக்கை 21-ம் தேதி நடைபெற்று முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட்டன. இதில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முத்துச்செல்வி, 94,977 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

Muthuselvi mla
68,757 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க.வின் ஜவகர் சூரிய குமாரை தோற்கடித்த முத்துச்செல்வி மார்ச் 22 அன்று சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். இதன் மூலம், சட்டப்பேரவையில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது. இந்த வெற்றி மூலம் அ.தி.மு.க.வை எதிர்த்துப் போட்டியிட்ட 12 பேரும் டெபாசிட் தொகையை இழந்தனர். 

இடைத்தேர்தல் வெற்றியின் மூலமாக பேரவையில் 150 இடங்களை அ.தி.மு.க. பெற்றுள்ளது. கட்சி வாரியாக பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை: அ.தி.மு.க. = 150, தே.மு.தி.க. = 29, தி.மு.க. = 23, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் = 10, இந்திய கம்யூனிஸ்ட் = 9, காங்கிரஸ் = 5, பா.ம.க. = 3, மனித நேய மக்கள் கட்சி = 2, புதிய தமிழகம் = 2, அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் = 1, நியமன உறுப்பினர் = 1.

குறிப்பு: 2 இடங்களில் வெற்றி பெற்ற சமத்துவ மக்கள் கட்சியும், ஒரு எம்.எல்.ஏ.வை வென்றுள்ள இந்திய குடியரசுக் கட்சியும் அ.தி.மு.க.சின்னத்திலேயே போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அம்மூவரும் அவையில் அ.தி.மு.க.உறுப்பினர்களாக கருதப் படுகின்றனர்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக